இடுகைகள்

டிசம்பர் 27, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விவேகானந்தர்

படம்
  2003ஆம் ஆண்டு ஜுலை மாதம் அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான ‘Fetna’ (Federation of Tamil Association of North America) சார்பில் நியூஜெர்சிக்கு அருகில் நடைபெற்ற தமிழ்ச்சங்கக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா செல்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நியூயார்க்,  வா ஷி ங்டன்,  ஃபுளோரிடா,  அட்லாண்டா  போன்ற அமெரிக்க மாகாணங்களில் அமைந்துள்ள தமிழ்ச் சங்கங்களில், பல்வேறு தலைப்புகளில் பேச்சு, கலந்துரையாடல் ஆகியவற்றில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது சிகாகோ நகரில் நம்முடைய விவேகானந்தர் அவர்கள் 1863ஆம் ஆண்டு சர்வசமய மாநாட்டில் பங்கேற்ற சொற்பொழிவு குறித்து நான் பேசினேன். அச்சமயம் அங்கு வந்திருந்த தமிழ் அறிஞர் ஒருவர், சிகாகோவில் விவேகானந்தர் வந்து பேசிய இடத்திற்கு வெளியில் ஒரு கல்வெட்டு இருப்பதாகக் குறிப்பிட்டுச் சொன்னார். அந்தக் கல்வெட்டில் விவேகானந்தரைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது,           ‘A light from the East’ “ கிழக்கிலிருந்து  வந்த  ஒளி”  எனக் குறிப்பதாகப் பெருமிதத்தோடு கூறினார். உண்மைதான். ...

சிலேடை விருந்து

படம்
தமிழ்மொழிக்கு இனிமை தருவன   உவமை, உருவகம், சொல்லடுக்கு, சந்தப்பாக்கள், உயர்வு நவிற்சி, சிலேடை   என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு மொழியும் இவ்வாறு தனக்கெனத் தனிச்சிறப்பைப் பெற்று விளங்கத்தான் செய்யும். தமிழில்  ‘இரட்டுற மொழிதல்’   அல்லது   ‘சிலேடை’  என்பது கேட்டுக் கொண்டிருப்பவர்களை, வாசிப்பவர்களைத் தன் வயப்படுத்தும் தன்மை உடையது எனச் சொல்லலாம். இச்சிலேடை, செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச் சிலேடை என இருவகைப்படும். இதில் செம்மொழிச் சிலேடை கற்றவர்க்கு மட்டும் எளிதில் விளங்குவது, மற்றது கல்லாதவரும் எளிதில் புரிந்து கொள்ளுமாறு தெளிவாய் அமைவது. ஒருசொல், இருபொருள் தருமாறு வருவதே இரட்டுற மொழிதலாகும். மேடைக்கலையில் வல்லவர்களான  கி.வா.ஜெகந்நாதன், கிருபானந்த வாரியார்  போன்றோருடைய பேச்சில் மிகச் சரளமாகச் சிலேடைச் சொற்கள் புகுந்துவரும். ஒருமுறை கி.வா.ஜெகந்நாதன் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசுவதற்காகச் சென்னையிலிருந்து கிளம்பி அதிகாலை நேரத்தில் தான் பேசவேண்டிய ஊருக்கு வந்து சேர்ந்தார். ரயில் நிலையத்தில் அவரை வரவேற்க வந்தவர்கள், அழகிய பூமாலை ஒன்றை அவருக்கு அணிவித்...

தமிழகத்தின் முதல் விடுதலைப்பெண் குரல்… வேலு நாச்சியார்

படம்
ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தியபோது நமக்குள் இருந்த ஒற்றுமையைக் குலைப்பதற்காகப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு நம்மை அவர்கள் வீழ்த்தினர். அதனால்தான் பிற்காலத்தில் மகாகவி பாரதியார்கூட,  ‘ ஆயிரம்   உண்டிங்கு   ஜாதி  –  எனில்   அந்நியர்   வந்து   புகல்   என்ன   நீதி ? –  ஓர்   தாயின்   வயிற்றில்   பிறந்தோர் ,  தம்முள்   சண்டைசெய்   தாலும்   சகோதரர்   அன்றோ ’ என்று நம் நிலை குறித்துப் பாடியுள்ளார். இந்தியாவிலேயே விடுதலைக்கான முதல் வீரக்குரல்  நெற்கட்டான் செவ்வலை  ஆண்ட  பூலித்தேவனுடைய  குரல்  என்றால், அதேபோல அதற்குப்பின் வந்த  தென்னரசியாம்  வீரமங்கை  வேலுநாச்சியும்  வீரக்குரல்  எழுப்பினார்.  ஆங்கிலேயரை எதிர்த்து இழந்த தன்னுடைய சிவகங்கை பகுதியை மீட்டு அரசியானார். தன் கணவரான  முத்து  வடுகநாதரைக்  காளையார்கோவிலில் சூழ்ச்சி செய்து ஆங்கிலேயர்கள் கொன்றதை அறிந்து, அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடும், இழந்த தன் நாட்டைமீ...