இடுகைகள்

G.U.Pope லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜி.யூ.போப்

படம்
  சமயப்பணி செய்ய இந்தியாவுக்கு, குறிப்பாகத் தமிழகத்துக்கு வந்த அயல்நாட்டுக் கிறிஸ்தவப் பாதிரிமார்கள் பலரும் தமிழ்மொழியைக் கற்று, அதன் அருமையை உணர்ந்து சமயப் பணியோடு, தமிழ்ப் பணியையும் சிறப்பாகச் செய்தனர். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதிய  கால்டுவெல் , தமிழில் உரைநடையை அறிமுகம் செய்து  தேம்பாவணி  என்ற நூலை எழுதிய  வீரமாமுனிவர்.   ரேனீஸ் ஐயர்  இவர்களோடு நினைக்கத்தக்க தமிழ்ப்பணியைத் தமிழுக்குச் செய்து 42 ஆண்டுகள் தமிழகத்திலேயே வாழ்ந்தவர்  ஜி.யூ.போப்  என்று அழைக்கப்படுகின்ற  ஜார்ஜ் யூக்ளோ போப்  ஆவார். ஜி.யூ.போப் 1820ஆம் ஆண்டு  பிரின்ஸ்  எட்வர்ட்  தீவில்  பிறந்தார். இவருடைய தாய் தந்தையார் பெயர்  ஜான்  போப் –  கேதரின்  யூக்ளோ  என்பதாகும்.  ஜி.யூ.போப்பின் உடன் பிறந்தவர்கள் பத்துப் பேர்களாவர். இவர் தமது 6ஆவது வயதில் தம் தாய் தந்தையரோடு இங்கிலாந்துக்கு அழைத்து வரப்பட்டார். சமயக்கல்வி அதிகம் போதிக்கப்பட்டது. சிறுவயதிலேயே கடவுளுக்குத் தொண்டு செய்யவேண்டும். சமயப்பணி ஆற்றவேண்டும் என்று விர...