புகழ்மிக்க ஓவியர்கள்
கலை வடிவங்களில் மிகப் பழமையானது ஓவியக்கலை. பேச்சுமொழி தோன்றுவதற்கு முன்பாக மனிதர்களிடையே தகவல் தொடர்புக்கு ஓவியங்கள் பயன்பட்டிருக்க வேண்டும். பின்னர் அவ்வோயங்களே வரி வடிவங்களாக, எழுத்து வடிவங்களாக மாறியிருக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, வேட்டைக்காரச் சமுதாயத்தைச் சார்ந்த ஆதிப்பழங்குடியினரின் குகைச்சுவரில் கூட ஓவியங்கள் காணப்படுகின்றன. நமது நாட்டில் அஜந்தா, எல்லோரா போன்ற இடங்களில் மூலிகைச்சாறுகளால் வரையப்பட்ட வண்ண ஓவியங்கள் இன்றைக்கும் அவ்வண்ணம் கெடாமல் அழகாகக் காட்சியளிப்பதைக் காணமுடிகிறது. தமிழகத்தில் சித்தன்வாசலில் இத்தகைய ஓவியங்கள் இன்றைக்கும் காணப்படுகின்றன. உலகப்புகழ்பெற்ற ஓவியர்கள் எனப் பார்க்கும்பொழுது இத்தாலியில் பிறந்த மைக்கேல் ஆஞ்சலோ, லியனார்டோ டாவின்ஸி, ரஃபேல் மற்றும் தற்காலத்தில் நவீன ஓவியங்களில் (Modern Art) புகழ்பெற்ற ஸ்பெயின் தேசத்தவரான பிகாசோ ஆகியோர் ஓவியக்கலையில் வியத்தகு சாதனைகள் புரிந்துள்ளதை வரலாற்றில் அறியமுடிகிறது. மத்திய இத்தாலியின் டைபர் நதிக்கரையோரமுள்ள பிளா...