இடுகைகள்

மே 7, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சக்தி தருவாய் சக்தி…

படம்
               இந்த உலகத்தில் நம்மை அறிமுகப்படுத்துவதும், உலகத்தாரை நமக்கு அறிமுகப்படுத்துவதும் தாய்தானே! அவளின்றி ஓர் அணுவும் அசையாது. தாயின்றி உலகம் தனித்து இயங்காது. தாய்ப்பாசம் என்பது உலகில் பிறந்த அத்தனை உயிரினங்களுக்கும் உண்டு. இதில் உயர்திணை, அஃறிணை பேதமில்லை. நிலத்தில், நீரில், ஆகாயத்தில் என எங்கு வசிக்கும் உயிரினங்களுக்கும் உற்ற துணை தாய்தான்.                உலகைத் துறந்த சந்நியாசிகள்கூட தாய்ப்பாசத்தை மறக்கவில்லை.  ஆதிசங்கரர் , ‘ காலடி’  எனும் இடத்தில் தான் துறவு மேற்கொள்வதற்காகத் தாயிடம் அதற்கு ஒப்புதல் பெறும்பொருட்டு, ஒரு முதலைத் தன் காலைப் பிடித்துக்கொள்வது போலவும் சந்நியாசத்தை மேற்கொண்டால்தான் பிடித்த காலை விடமுடியும் என்று அந்த முதலை சொல்வதாகக் கூறித், தாயின் ஒப்புதலைப் பெறுகிறார். அப்போதும்கூட ‘உன் கடைசிக் காலத்தில் உன்னைக் காண வருவேன்’ என்று வாக்குறுதியும் தந்து அதை நிறைவேற்றவும் செய்கிறார்.      ...