நலம் தரும் நகைச்சுவை
வளமான வாழ்வுக்குப் பொருள் தேவை. அதுபோல, நலமான வாழ்வுக்கு நகைச்சுவை உணர்வு மிகமிகத் தேவை. “சிரிப்பு – அதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு” என்று கலைவாணர் என். எஸ். கிரு ஷ் ணன் அந்தக்காலத் திரைப்படமான ‘ ராஜாராணி’ யில் கவிஞர் மருதகாசியின் பாடலில் எளிமையாகப் பாடியிருக்கிறார். ஒன்பது சுவைகளில் முதல் சுவை நகைச்சுவை என்பது 2000ஆண்டுகளுக்கு முன்னே நம் தமிழறிஞர்கள் உலகுக்குணர்த்திய உண்மை. வள்ளுவப் பெருந்தகைகூட, சிரிப்பவர்களுக்குத்தான் உலகம், ஒளிமயமாக இருக்கிறது. அப்படி இல்லாதவர்களுக்கு அது பகலாக இருந்தாலும் இருட்டுத்தான் என்பதை, ‘நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள்” ...