கிராமியப் பொருளாதாரம் நாட்டின் எதிர்காலம் – ஜே.சி. குமரப்பா
இந்தியப் பொருளாதாரம் கிராமங்களைச் சார்ந்ததே என்பது அறிஞர்களின் கருத்து. சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களிடத்தில் ஒரு ஆங்கிலேயர் , ‘வாட் இஸ் யுவர் கல்ச்சர்?’ என்று கேட்டபோது, அவர் சட்டென்று, ‘ அக்ரிகல்ச்சர் இஸ் அவர் கல்ச்சர்’ என்று பெருமையோடு கூறினாராம். காந்தியடிகளின், கிராமப்பொருளாதாரக் கொள்கைகளின் தளபதி என்று அழைக்கப்பட்டவர் திரு.ஜே.சி. குமரப்பா அவர்கள் . அவர் தமிழகத்திலே பிறந்து அமெரிக்காவிலே பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருந்தபோதும், இந்திய மண்ணையும், சுற்றுப்புறச் சூழலையும், மனிதர்களையும் பெரிதும் நேசித்தார். இன்னும் சொல்லப்போனால் அவர் அன்றே இரசாயன உரங்களைத் தவிர்க்க வேண்டும், இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும் எனக் குரல் எழுப்பினார். வளம்மிகுந்த நம் மண்ணுக்கு இயற்கை உரங்களே தாய்ப்பால் போல வலிமை தரும் என்றார். அதை வலியுறுத்தும் விதமாக, ஒருமுறை பார்லிமெண்டுக்கு மாட்டுவண்டியில் வந்தாராம் ஜே.சி. குமரப்பா. அப்போது அவரைப் பார்த்துச் சிரித்த அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் சிரித்துக்கொண்டே ‘நிலங்களை டிராக்டர்கள் கொ...