இடுகைகள்

writer devan லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எழுத்துலகின் நகைச்சுவை வேந்தர் – தேவன்…!

படம்
நான் சிறுபிள்ளையாக இருந்தபோது, துப்பறியும் கதைகளையும் நகைச்சுவைக் கதைகளையும் விரும்பிப் படிப்பேன். அப்படி நகைச்சுவைக் கதைகளில் நான் அதிகம் விரும்பிப் படித்தது யாருடைய எழுத்து என்றால்,  மகாதேவன்  என்ற இயற்பெயர் கொண்டு  ஆனந்த விகடனில்  எழுதிவந்த  திரு.தேவன்  அவர்களுடைய கதைகள்தான் என்னைப் பெரிதும் ஈர்த்தன. அப்போதெல்லாம் புத்தகம் வாங்குவதற்குப் பணவசதி இருக்காது. தொடர்கதைகளை நண்பர் வீடுகளிலும், தொகுப்புப் புத்தகங்களை நூலகங்களிலும் சென்று படிப்பது எனக்கு வழக்கம். ஒருநாள் தேவன் அவர்களுடைய  ‘மைதிலி’  என்ற கதையை நான் நூலகத்தில் மனதிற்குள் படித்துக்கொண்டிருந்தபோது அதில் வந்த நகைச்சுவைக் காட்சிகளைப் படித்துவிட்டு சத்தம்போட்டு சிரித்துவிட்டேன். அங்கே படித்துக்கொண்டிருந்தவர்கள் என்னைக் கோபத்தோடு பார்க்க, நூலகர் வந்து ‘இப்படியெல்லாம் நூலகத்தில் சிரிக்கக்கூடாது’ என்று மிரட்டிவிட்டுப் போனார். அப்படி என்னை சிரிக்கவைத்த அந்தப் புத்தகம்போலவே  ‘கோமதியின் காதலன்’, ‘துப்பறியும் சாம்பு’, ‘சிஐடி சந்துரு’, ‘மிஸ்டர் வேதாந்தம்’  என்ற கதைகளையும் சொல்லிக...