இடுகைகள்

இயக்குநர் சிகரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திரைவானில் ஒரு சந்திரன்… கே.பாலச்சந்தர்

படம்
தமிழ்த் திரையுலகில் புதிய மாற்றங்களை உருவாக்கிய இயக்குநர் வரிசையில்   டைரக்டர் ஸ்ரீதர்   அவர்களுக்கு எத்தனை பங்குண்டோ அத்தனை பங்கு   இயக்குநர் சிகரம் திரு.கே.பாலச்சந்தர்   அவர்களுக்கும் அவரைத் தொடர்ந்து வந்த   இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கும்   உண்டு. திரு.கே.பாலச்சந்தர் அவர்கள் அரசுப்பணியாளராக வாழ்க்கையைத் தொடங்கியபோதும் அவரிடத்தில் இருந்த நாடகத் தாகம் அவரை நாடக உலகிற்கும் திரையுலகிற்கும் அழைத்து வந்தது. சென்னை ஏ.ஜி. அலுவலகத்தில் (அக்கவுண்டண்ட் ஜெனரல்) பணிபுரிந்தபோது உணவு இடைவேளை நேரத்தில் நாடகத்திற்கான கருவை உருவாக்கி நடிக்க விருப்பமுள்ளவர்களைத் தன் குழுவில் இணைத்துக்கொண்டு ஆங்கில நாடகங்களை, மேடை நாடகங்களாக இயக்கிக்கொண்டிருந்தார் பாலச்சந்தர். அவரது ஆற்றலைக் கேள்விப்பட்ட திரையுலகைச் சார்ந்த திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் அவரது தயாரிப்பு நிறுவனத்தில் பாலச்சந்தரை இணைத்துக்கொண்டு  எம். ஜி. ஆர்  அவர்கள்  கதாநாயகனாக நடித்த  ‘ தெய்வத்தாய்’  படத்திற்குக் கதை வசனம் எழுத வாய்ப்புக் கொடுத்தார். அந்தப் படம் வெற்றிபெற்ற போதிலும் அதற்குப் பிறகு...