இடுகைகள்

ஏப்ரல் 11, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஞானம் வந்திருச்சு…

படம்
      இப்போதைய அன்றாட வாழ்வில் எவ்வளவோ நெருக்கடிகள். அவசரங்கள். இதனால் மனஇறுக்கம் கூடி விடுகிறபோது இதிலிருந்த நம்மை விடுபட வைப்பது நகைச்சுவை உணர்வே.      அதுதான் நம் மனசை லேசாக்குகிறது. நம் பிரச்சனைகளை இறகுபோல உணரவைக்கிறது. எல்லோருக்குமே இயல்பாக நகைச்சுவை உணர்வு இருக்கி;றது. இல்லை என்றால் ரசிக்க முடியாது.    நகைச்சுவைக்கென்று சூழலும் மனநிலையும் முக்கியம். சில திரைப்படங்களில் ஒரு நகைச்சுவை நடிகர் தோன்றியதுமே சிரித்து விடுவார்கள். பழைய படமாகிய  ‘ புதுமைப்பித்தன்’  னில் ஒரு காட்சி. படம் ஆரம்பித்ததும் கப்பலைக் காட்டுவார்கள். கொடியை அதில் ஏற்றும்போது, தலைகீழாக மேலே போவார் சந்திரபாபு. அந்தக் காட்சியே சிரிப்பதற்கானச் சூழலை உருவாக்கிவிடும்.      திருச்சி பேராசிரியராகிய ராதாகிருஷ்ணன் அவர்கள் தலையில் கட்டுக்குடுமி வைத்திருப்பார். மேடையில் தன்னைத்தானே அறிமுகப்படுத்தும்போதே; இப்படி ஆரம்பிப்பார். ‘தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்டில் ஒரு தடவை போய் இறங்கினதுமே ஒருத்தன் வந்து என்னைக் கும்பிட்டான். ‘என்னை நீ பார்த்திருக்கிறாயா?’...

கலைமகளுக்கே ஆசிரியர்… கி.வா.ஜ.,…

படம்
    தமிழில் சிலேடை என்பது ‘ இரட்டுற மொழிதல் ’ என்ற பொருளில் வரும் . அக்காலத்தில் சிலேடையாகப் பாடுவதில் காளமேகப்புலவர் வல்லவர் . பேச்சில் சிலேடை தொனிக்கப் பேசுபவர்கள் தம் பேச்சால் அனைவரையும் ஈர்ப்பர் . அத்தகைய வல்லமை பெற்றவர்களில் ஒருவர்தான் கி . வா . ஜகந்நாதன் அவர்கள் . இவர் மிகச்சிறந்த எழுத்தாளர் , பேச்சாளர் என்பதோடு பத்திரிக்கை ஆசிரியராகவும் இருந்தார் .   ஒருமுறை இவருடைய நண்பர் இவரைப் பாராட்டிப் பேசும்போது ‘ உங்களுக்குக் கிடைத்த புகழ் யாருக்குக் கிடைக்கும் ’ என்றாராம் . அதைக் கேட்டு கி . வா . ஜ . வியப்போடு , ‘ என்ன புகழ் ?’ என்று கேட்க , ‘ நீங்கள் கலைமகளுக்கே ஆசிரியராயிற்றே ’ என்று புன்னகையோடு சொன்னாராம் . கேட்ட கி . வா . ஜ . வின் முகத்திலும் புன்னகை .   இவரின் சிலேடைகள் இடத்திற்கும் நேரத்திற்கும் ஏற்றபடி அமையும் . ஒருமுறை இவர் ஒரு ஊருக்குப் பேசுவதற்காக இரயிலில் சென்றாராம் . காலைநேரத்தில் இரயில் அந்த ஊரில் போய் நிற்க , இவரை வரவேற்க வந்தவர்கள் , பெரிய மாலையைக் கொண்டுவந்து இவர் கழுத்த...