இடுகைகள்

ஜூலை 13, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கழுகுமலையும்… எல்லோரா குகைக்கோயிலும்…

படம்
               தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல் மலைக்குகையில் அமைந்துள்ள சமணப்பள்ளிக்குப் போயிருந்தபோது அங்கிருந்த ஓவியங்களைப் பார்த்தும் நான் வியந்துபோனேன். இந்த வண்ணங்கள் எங்கிருந்து கிடைத்தன? என்று நான் கேட்டபோது, அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவர் எனக்கு அந்த அதிசயத்தைக் காண்பித்தார்.                என்னை அழைத்துக்கொண்டு அந்தக் மலைகுகைக்கு அருகிலிருந்த சின்னக் காட்டுக்குள் போனார். ஏதோ ஒரு மூலிகை போன்ற செடியிலிருந்து சில பச்சை இலைகளைப் பறித்து அதைக் கசக்கி என் கைகளில் அவர் தடவ, என் கை மருதாணி வைத்ததுபோலச் சிவந்து போனது. அவர் கையும் சிவப்பானது.                ‘இந்தக் கலரு மூணு நாளைக்கு உங்க கையில இருக்கும்’ என்று அவர் பெருமையாகச் சொல்லியதோடு, இது மாதிரி ஆயிரக்கணக்கான செடிகள் இந்தப் பகுதியில் இருக்கின்றன. இவற்றின் சாறுகளை வைத்துதான் குகைக்குள் இருக்கின்ற ...