இடுகைகள்

gnanasambandan.in லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆடிப்பட்டம் தேடி விதை…

படம்
  நம் பண்டையத் தமிழர்கள் பன்னிரெண்டு மாதங்களை ஆறு பருவங்களாகப் பிரித்து வைத்திருந்தார்கள். இதற்குப் பெரும்பொழுது என்று பெயர். அந்த ஆறு பருவங்கள் எவை என்றால்,  1. சித்திரை, வைகாசி - இளவேனில் 2. ஆனி, ஆடி - முதுவேனில் 3. ஆவணி, புரட்டாசி  - கார்காலம் 4. ஐப்பசி, கார்த்திகை - கூதிர்காலம் 5. மார்கழி, தை - முன்பனிக்காலம் 6. மாசி, பங்குனி - பின்பனிக்காலம் என்பவையாகும். முதுவேனிற் காலமாகிய இந்த ஆடிமாதத்தில்தான் சூரியன் தெற்குநோக்கி நகர்கின்ற தட்சிணாயணக் காலம் வருகின்றது. இதே சூரியன் தை மாதம் தொடங்கும்போது வடக்குநோக்கி நகர்வதால் அது உத்திராயணக் காலம் என அழைக்கப்படுகிறது.  ஆடி மாதத்தைப் பொறுத்தவரை பல்வேறு சிறப்புகள் இம்மாதத்திற்கு உண்டு. மழைக்குரிய பருவகாலம் தொடங்கவிருப்பதால் ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பது விவசாயிகளின் பேச்சு வழக்கு. இந்த ஆடிமாதத்தில் காற்று தொடர்ந்து வீசுவதால் ‘ஆடிக்காத்துல அம்மியும் பறக்கும்’ என்பது கிராமத்துப் பழமொழி.  வேளாண்மை தொடங்குகின்ற காலமாதலால் பணப்புழக்கம் குறைவாக இருக்கும், விவசாய வேலைகள் தொடங்கி இருக்கும். இதனால்தானோ ...

கழுகுமலையும்… எல்லோரா குகைக்கோயிலும்…

படம்
               தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல் மலைக்குகையில் அமைந்துள்ள சமணப்பள்ளிக்குப் போயிருந்தபோது அங்கிருந்த ஓவியங்களைப் பார்த்தும் நான் வியந்துபோனேன். இந்த வண்ணங்கள் எங்கிருந்து கிடைத்தன? என்று நான் கேட்டபோது, அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவர் எனக்கு அந்த அதிசயத்தைக் காண்பித்தார்.                என்னை அழைத்துக்கொண்டு அந்தக் மலைகுகைக்கு அருகிலிருந்த சின்னக் காட்டுக்குள் போனார். ஏதோ ஒரு மூலிகை போன்ற செடியிலிருந்து சில பச்சை இலைகளைப் பறித்து அதைக் கசக்கி என் கைகளில் அவர் தடவ, என் கை மருதாணி வைத்ததுபோலச் சிவந்து போனது. அவர் கையும் சிவப்பானது.                ‘இந்தக் கலரு மூணு நாளைக்கு உங்க கையில இருக்கும்’ என்று அவர் பெருமையாகச் சொல்லியதோடு, இது மாதிரி ஆயிரக்கணக்கான செடிகள் இந்தப் பகுதியில் இருக்கின்றன. இவற்றின் சாறுகளை வைத்துதான் குகைக்குள் இருக்கின்ற ...

நீரே…. தெய்வம்….!

படம்
நீர்இன்று  அமையாது  உலகெனின்  யார்யார்க்கும்                              வான்இன்று  அமையாது  ஒழுக்கு.” என்பது வள்ளுவர் வாக்கு. இந்த உலகம் நீரால் சூழப்பட்டது. முந்நீராகிய உப்புக் கடல்நீரும், நன்னீராகிய குடிநீராரும்தான் இந்த உலகத்து உயிர்களை வாழ வைக்கின்றன. கடல்நீர் முக்கால் பகுதி பூமியிலிருந்தாலும், குடிநீராகிய நன்னீர் இருந்தால்தான் மனிதர்களும், மற்ற உயிர்களும் தாவரங்களும் வாழமுடியும். நன்னீரின் பெருமையைப் பற்றிக் கூறும்போது,                 மடல்பெரிது  தாழை  மகிழினிது  கந்தம்;                 உடல்சிறிய  ரென்றிருக்க  வேண்டா –  கடல்பெரிது                 மண்ணீரு  மாகா  ததனருகே  சிற்றூறல்       ...

மதுரைத் தலங்களும் தேவாரமும்

படம்
                           ஒருமுறை முதுகலை வகுப்பில் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பதிகங்களுக்குப் பொருள் கூறிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தேன்.                அப்போது ஒரு மாணவர் எழுந்து ‘ஐயா, திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலம் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது ஏழாம்நூற்றாண்டு என்று கூறினீர்கள். 1400 ஆண்டுகளுக்கு முன்பு அவர் வாழ்ந்ததற்கானச் சான்றாதாரங்கள் ஏதாவது உண்டா?” எனக் கேட்டார். எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.                ‘தம்பி நல்ல கேள்வி கேட்டாய். அவர் வாழ்ந்தார் என்பதற்குப் பல சான்றாதாரங்கள் உண்டு.                அவர் செய்த அருஞ்செயல்கள்                நிகழ்த்திய சாதனைகள்           ...

நகைச்சுவை என்னும் சாவி…

படம்
திரையுலகில் புதுமுகங்களை அறிமுகம் செய்த இயக்குநர்கள் என்று பார்க்கும்போது இயக்குநர்  ஸ்ரீதர்,  கே. பாலச்சந்தர்,  பாரதிராஜா,  இவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இதுபோல எழுத்துலகில் புதியவர்களைத், தான் பணியாற்றிய பத்திரிக்கையில் அறிமுகப்படுத்தியதோடு அவர்களுக்குப் பெரும் புகழையும்வாங்கித்தந்தவர்  எழுத்தாளர்  பத்திரிக்கையாளர்   சா. விசுவநாதன்  என்ற  சாவி   அவர்கள்தான். நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவர்களான  கல்கி,  புதுமைப்பித்தன்,  தேவன்  இவர்களையடுத்துச் சாவி அவர்களையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். இவரது மேடைப்பேச்சும் மிகுந்த நகைச்சுவையாய் இருக்கும். புரட்சித்தலைவர்  எம். ஜி. ஆர்,  சரோஜாதேவி  அவர்கள் நடித்து ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த  ‘ அன்பே  வா’  படம் நூறுநாட்கள் ஓடி வெற்றிகண்டது. அந்தப் படத்தினுடைய வெற்றிவிழாவில் திரு.சாவி அவர்கள் பேசும்போது, ‘இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்குக் காரணம் இந்தப் படத்தைத் தயாரித்த ஏ.வி.எம்.நிறுவனம்தான் என்று நினைப்பீர்கள். இல்லை’ என்றவுடன் மேடையில் இர...

கே.எம்.முன்ஷியின் ஜெய் சோம்நாத்….

படம்
      இந்தியா ஒரு பண்டைய தேசம் என்பதும், அறிஞர்களும் ஞானிகளும் நிறைந்த தேசம் இதுவென்பதும் உலகோர் ஏற்றுக்கொண்ட உண்மை. இதை மகாகவி பாரதி தன்னுடைய பாடலிலே சொல்லும்போது                ஞானத்திலே பர மோனத்திலே – உயர்                மானத்திலே அன்ன தானத்திலே              கானத்திலே அமுதாக நிறைந்த                கவிதையிலே உயர்நாடு……… என்று கூறுவார்.                தென்னாடாகிய தமிழகத்திற்கு மூவாயிரம் ஆண்டு இலக்கிய வரலாறு உண்டு. இதேபோன்று வடஇந்தியாவிலும் வேதகால நாகரீகம் தொடங்கி, இதிகாசங்களைத்  தோ ற்றுவித்த  வால்மீகி,  வியாசர்,  காளிதாசர்,  பாரவி   போன்ற படைப்பாளப் பெருமக்களை கொண்ட வரலாறு அங்கும் உண்டு.                இன்றைக்கும்கூட  வி. ச. காண்டேகரை,  சரத்ச...

அகராதியின் தந்தை… வீரமாமுனிவர்…

படம்
பழைமையும் பெருமையும் மிக்க இந்தியப் பெருநாட்டின் செல்வவளத்தை, இயற்கை வளத்தைக் கேள்வியுற்ற போர்ச்சுக்கீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், ஆர்மீனியர்கள் போன்றோர் இந்நாட்டுக்கு முதலில் வியாபாரம் செய்யத்தான் வந்தனர். வந்த இடத்தில், இந்தியாவின் ஒற்றுமையின்மையைக் கண்டபின்பு, அவர்களெல்லாம் தங்களது துப்பாக்கி, பீரங்கி பலத்தால் இந்தியாவின் பல பகுதிகளை ஆளத் தொடங்கினார்கள். இப்போட்டியில் வென்றவர்கள் ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும்தான். (வந்தவாசி என்ற இடத்தில் நடந்த போர்தான் இந்த அதிகாரப் போட்டியைத் தீர்மானித்தது) பிரெஞ்சுக்காரர்கள் பாண்டிச்சேரி, காரைக்கால், கோவா, ஆகிய பகுதிகளைக் கைப்பற்ற, இந்தியா முழுமையும் ஆங்கிலேயரின் ஆளுகைக்குக் கீழ் வந்தது. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஆட்சியைப் பிடித்ததோடு இந்தியாவில் தங்கள் மதத்தைப் பரப்புவதற்காகவும் இந்தியமக்களைத் தங்களது கிறித்தவ மதத்திற்கு மதம் மாற்றம் செய்வதற்காகவும் தங்கள் நாட்டுப் பாதிரிமார்களை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர். அப்படி வந்தவர்கள்தான்  கால்டுவெல்,  ஜி. யு. போப்,  கான்ஸ்டன்டைன்  ஜோசப்  ...

கந்தர்வ(ன்) கானம்…

படம்
நாளும்  கிழமையும்  நலிந்தோர்க்கு  இல்லை ஞாயிற்றுக்கிழமையும்  பெண்களுக்கு  இல்லை                                                                                                                                                                         – கந்தர்வன் தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுக்கவிதை எனும் புதிய காற்று  ‘ வானம்பாடி’  இயக்கமாகத் தமிழகத்தில் மெல்ல வீசத் தொடங்கியது. அதை தோற்றுவித்த பெருமக்கள் என்று பட்டியலிட்டால்  அப்துல்  ரகுமான்,  புவிஅரசு,  ஈரோடு  தமிழன்பன்  கங்கை  கொண்டான்,  சிற்பி, ...

கலிகாலக் கம்பர்… மீனாட்சி சுந்தரம்பிள்ளை

படம்
திரிசரபுரம்  மீனாட்சி  சுந்தரம்  பிள்ளை  அவர்கள்  ‘ கலிகாலக்  கம்பர்’  என அழைக்கப்படுகின்ற கவிச்சக்கரவர்த்தி ஆவார். இவரது கற்பனையில் உதித்த தலபுராணங்களும், தனிப்பாடல்களும் கலம்பகம், உலா, பிள்ளைத்தமிழ், தூது எனும் சிற்றிலக்கிய வகைகளும் இவரது கவிஆற்றலுக்கு எடுத்துக்காட்டுகளாய் அமைந்தன இவர்; பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் படைத்துள்ளார்  என  இவரது  மாணவராகிய  தமிழ்த்தாத்தா  உ. வே.  சாமிநாத  ஐயர்    குறிப்பிடுகிறார். இவர் திருவாவடுதுறையின் ஆதீனகர்த்தராக விளங்கிய அம்பலவாண தேசிகர் மற்றும் சுப்பிரமணிய தேசிகர் அவர்களால் ஆதரிக்கப்பெற்று அவ்ஆதீனத்தின் அவைக்களப்புலவராகவும் விளங்கினார். இவர் எழுதிய  வாட்போக்கிக்  கலம்பகம்  மற்றும்  சேக்கிழார்  பிள்ளைத்  தமிழ்,   திருநாகைக்காரோணப்  புராணம்  போன்ற நூல்கள் இவரின் தமிழ்ப்பணிக்குப் பெருமை சேர்த்து வருவன. அந்தக்காலத்தில் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் மட்டுமே இருந்த சூழலில் அரிய நூல்களை மாணவர்களுக்குக் கற்பிப்பதற்காகவே இவர் தன் வீட்டிலேயே...

எலி வேட்டை

படம்
                யானைக்கொரு காலம் வந்தால்                 பூனைக்  கொரு  காலம்  வரும்” இது பழமொழி. புதுமொழி சொல்ல வேண்டுமென்றால்,                 ‘ புலிக்குப்  பயந்த  காலம்  போய்                  எலிக்குப்  பயந்த  காலமாகி  விட்டது’  எனக் கூறலாம்.                அப்படி என்ன எலிகளுக்குப் பலம் வந்து விட்டது என நினைக்கிறீர்களா? எலியால் விளைந்த துயரையும், அதனால் விளைந்த பலனையும் உங்களுக்குக் கூறட்டுமா?                அப்போது நாங்கள் கிராமத்தில் இருந்தோம். மிகப்பெரிய பழைய வீடு. பெரும்பாலும் பகலில்கூட, கீழே படுத்திருப்பவரை மிதித்துக் கொண்டு போகும்பட...