இடுகைகள்

ஏப்ரல் 29, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரயிலே…. ரயிலே…

படம்
இன்றைக்கும் ரயில் என்றாலே உற்சாகம்தான். அதிலும் ரயில் ஸ்டீம்என்ஜினாகப் புகைவிட்டுக்கொண்டு குப்…குப்… என்று கிளம்பி, வேகம் எடுத்துச் செல்வதைப் பார்க்கையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஒரே ஆனந்தம்தான்.                நீராவியின் சக்தியை அறிந்த  ‘ ஜேம்ஸ்  வாட்டும்’ , நீராவி என்ஜினைக் கண்டுபிடித்த  ‘ ஜார்ஜ்  ஸ்டீபன்ச’ னும்  இன்றைய நவீன ரயிலை நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.                அதிலும், நம்மூரில் மரவட்டைக்குப் பெயர், ரயில் வண்டிப்பூச்சி. சிறுவர்கள் விளையாடும் விளையாட்டிற்குப் பெயர் ரயில் விளையாட்டு என்று, ரயில் நம் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட ஒரு உயிர்ப் பொருளாகிவிட்டது.                அந்தக்காலத்தில்  ‘ நல்லதம்பி ’ படத்தில் கலைவாணர் N.S.கிருஷ்ணன் அவர்கள் ‘நந்தனார்’ என்ற பழைய கதையை காலத்திற்கேற்ப மாற்றி, ‘க...