விளக்குகளை ஏற்றும் விளக்கு… ராகுல சாங்கிருத்தியாயன்
நான் மேடையில் பேசுகிறபோதெல்லாம் எனக்குப் பிடித்த புத்தகம், என்னைத் தொடர்ந்து பயணிக்கத் தூண்டிய புத்தகம் என்று ஒன்று இருக்குமானால் அது ‘வால்கா முதல் கங்கை வரை’ என்ற புத்தகம்தான் எனக் கூறுவேன். இந்தப் புத்தகத்தை நான் பள்ளியில் படிக்கிற காலத்தில் படிக்கத் தொடங்கி இன்றுவரை படித்து வருகிறேன். இதனுடைய ஆசிரியர் கேதார்நாத் பாண்டே என்ற இயற்பெயர் கொண்ட ராகுல சாங்கிருத்தியாயன் . இவருடைய வாழ்கை வரலாற்று நூலும் இவரின் பயண நூல்களும் என்னை அக்காலத்திலேயே வியக்க வைத்தன. தமிழ்மொழி உள்பட 33மொழிகள் தெரிந்த பன்மொழிக் கலைஞர் இவர். இவருடைய பயணங்கள் மூலமாக இந்திய நாட்டின் இயற்கை வளத்தை மட்டுமல்லாமல் இந்தியப் பண்பாட்டையும் அறிந்துகொள்ளலாம். மனிதகுல வரலாற்றைப் பற்றி ஜார்ஜ் தாம்சன் என்பவர் எழுதிய நூலையும் நான் படித்திருக்கிறேன். ஆயினும் ‘வால்கா முதல் கங்கை வரை’ நூலில் மனிதகுல வரலாறு தொடங்கி இந்தியாவில் காந்தியடிகளுக்கும் அம்பேத்காருக்கும் நடந்த...