இடுகைகள்

gnanasambandam லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆபிரகாம் லிங்கன்

படம்
  மனித வாழ்க்கையில் பொதுவாக ஒரு கேள்வி எழுவதுண்டு. நாம் வாழும் வாழ்க்கை புகழ் மிகுந்ததா? பொருள்தேடி அலைவதா? வரலாற்றில் இடம் பெறுவதா? வரலாற்றை உருவாக்கிக் காட்டுவதா?’ இந்தக் கேள்விகளில் பொருள் தேடுவதென்பது பெரும்பான்மையான மக்களின் நிலையாகிவிட்டது. ‘தேடிச் சோறு நிதம் தின்று’ எனப் பாரதி இவர்களைத்தான் குறிப்பிடுகிறார். வரலாற்றில் இடம்பெறுவது என்பது கூட புகழ்மிக்கதுதான். ஆனால் வரலாற்றைத் தங்களுக்காக உருவாக்கிக் கொள்பவர்களே Trend Setter என அழைக்கப்படுகிறார்கள். அவ்வாறு வரலாற்றை உருவாக்கிய நாயகர்களில் ஒருவர்தான்   அமெரிக்க  நாட்டில்  கென்டக்கி  மாநிலத்தில் 1809 ஆம்  ஆண்டில்  பிறந்த  ஆபிரகாம்  லிங்கன். வாழ்க்கையில் முன்னேறாதவர்கள் சில காரணங்களைச் சொல்வார்கள். நான் செல்வந்தர் வீட்டில் பிறந்திருக்க வேண்டும், ஐந்துவருடம் முந்திப் பிறந்திருந்தால் பெரிய சாதனைகள் செய்திருப்பேன், அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்திருந்தால் அறிவியல் அறிஞன் ஆகியிருப்பேன் என்று கிடைக்காததை எண்ணி  ‘ நல்ல  பொழுதையெல்லாம்  தூங்கிக்    கெடுத்துவிட்டு  நாட...

சிலேடை விருந்து

படம்
தமிழ்மொழிக்கு இனிமை தருவன   உவமை, உருவகம், சொல்லடுக்கு, சந்தப்பாக்கள், உயர்வு நவிற்சி, சிலேடை   என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு மொழியும் இவ்வாறு தனக்கெனத் தனிச்சிறப்பைப் பெற்று விளங்கத்தான் செய்யும். தமிழில்  ‘இரட்டுற மொழிதல்’   அல்லது   ‘சிலேடை’  என்பது கேட்டுக் கொண்டிருப்பவர்களை, வாசிப்பவர்களைத் தன் வயப்படுத்தும் தன்மை உடையது எனச் சொல்லலாம். இச்சிலேடை, செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச் சிலேடை என இருவகைப்படும். இதில் செம்மொழிச் சிலேடை கற்றவர்க்கு மட்டும் எளிதில் விளங்குவது, மற்றது கல்லாதவரும் எளிதில் புரிந்து கொள்ளுமாறு தெளிவாய் அமைவது. ஒருசொல், இருபொருள் தருமாறு வருவதே இரட்டுற மொழிதலாகும். மேடைக்கலையில் வல்லவர்களான  கி.வா.ஜெகந்நாதன், கிருபானந்த வாரியார்  போன்றோருடைய பேச்சில் மிகச் சரளமாகச் சிலேடைச் சொற்கள் புகுந்துவரும். ஒருமுறை கி.வா.ஜெகந்நாதன் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசுவதற்காகச் சென்னையிலிருந்து கிளம்பி அதிகாலை நேரத்தில் தான் பேசவேண்டிய ஊருக்கு வந்து சேர்ந்தார். ரயில் நிலையத்தில் அவரை வரவேற்க வந்தவர்கள், அழகிய பூமாலை ஒன்றை அவருக்கு அணிவித்...

தமிழகத்தின் முதல் விடுதலைப்பெண் குரல்… வேலு நாச்சியார்

படம்
ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தியபோது நமக்குள் இருந்த ஒற்றுமையைக் குலைப்பதற்காகப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு நம்மை அவர்கள் வீழ்த்தினர். அதனால்தான் பிற்காலத்தில் மகாகவி பாரதியார்கூட,  ‘ ஆயிரம்   உண்டிங்கு   ஜாதி  –  எனில்   அந்நியர்   வந்து   புகல்   என்ன   நீதி ? –  ஓர்   தாயின்   வயிற்றில்   பிறந்தோர் ,  தம்முள்   சண்டைசெய்   தாலும்   சகோதரர்   அன்றோ ’ என்று நம் நிலை குறித்துப் பாடியுள்ளார். இந்தியாவிலேயே விடுதலைக்கான முதல் வீரக்குரல்  நெற்கட்டான் செவ்வலை  ஆண்ட  பூலித்தேவனுடைய  குரல்  என்றால், அதேபோல அதற்குப்பின் வந்த  தென்னரசியாம்  வீரமங்கை  வேலுநாச்சியும்  வீரக்குரல்  எழுப்பினார்.  ஆங்கிலேயரை எதிர்த்து இழந்த தன்னுடைய சிவகங்கை பகுதியை மீட்டு அரசியானார். தன் கணவரான  முத்து  வடுகநாதரைக்  காளையார்கோவிலில் சூழ்ச்சி செய்து ஆங்கிலேயர்கள் கொன்றதை அறிந்து, அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடும், இழந்த தன் நாட்டைமீ...