ஆபிரகாம் லிங்கன்
மனித வாழ்க்கையில் பொதுவாக ஒரு கேள்வி எழுவதுண்டு. நாம் வாழும் வாழ்க்கை புகழ் மிகுந்ததா? பொருள்தேடி அலைவதா? வரலாற்றில் இடம் பெறுவதா? வரலாற்றை உருவாக்கிக் காட்டுவதா?’ இந்தக் கேள்விகளில் பொருள் தேடுவதென்பது பெரும்பான்மையான மக்களின் நிலையாகிவிட்டது. ‘தேடிச் சோறு நிதம் தின்று’ எனப் பாரதி இவர்களைத்தான் குறிப்பிடுகிறார். வரலாற்றில் இடம்பெறுவது என்பது கூட புகழ்மிக்கதுதான். ஆனால் வரலாற்றைத் தங்களுக்காக உருவாக்கிக் கொள்பவர்களே Trend Setter என அழைக்கப்படுகிறார்கள். அவ்வாறு வரலாற்றை உருவாக்கிய நாயகர்களில் ஒருவர்தான் அமெரிக்க நாட்டில் கென்டக்கி மாநிலத்தில் 1809 ஆம் ஆண்டில் பிறந்த ஆபிரகாம் லிங்கன். வாழ்க்கையில் முன்னேறாதவர்கள் சில காரணங்களைச் சொல்வார்கள். நான் செல்வந்தர் வீட்டில் பிறந்திருக்க வேண்டும், ஐந்துவருடம் முந்திப் பிறந்திருந்தால் பெரிய சாதனைகள் செய்திருப்பேன், அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்திருந்தால் அறிவியல் அறிஞன் ஆகியிருப்பேன் என்று கிடைக்காததை எண்ணி ‘ நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்துவிட்டு நாட...