இடுகைகள்

gnanasambandan tamil ulagam. G.Gnanasambandan லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மீண்டும் பிறப்பேன்… குதிராம் போஸ்…

படம்
  பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கல்கத்தா தமிழ்ச்சங்கத்தின் அழைப்பின்பேரில் நாங்கள் எங்கள் பட்டிமன்றக் குழுவோடு கல்கத்தா சென்றிருந்தோம். நிகழ்ச்சி முடிந்தபிறகு கல்கத்தாவின் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தோம்.  அதில் முக்கியமாக எங்களைக் கவர்ந்தது விக்டோரிய மகாராணியின் அரண்மனையும் (Victoria Memorial) அதில் அமைந்திருந்த அருங்காட்சியகமும்தான் (Indian Museum) . நாங்கள் அந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருட்களையும் ஓவியங்களையும் பார்த்துக்கொண்டு வந்தோம்.  அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான ஓவியங்களில் ஒன்று என்னைச் சற்றுநேரம் திகைக்க வைத்தது. அந்த ஓவியத்திலிருந்த இளைஞனைப் பற்றி நான் பலமுறை மேடைகளில் பேசியிருக்கிறேன், பலர் பேசக் கேட்டிருக்கிறேன்.  18வயதே ஆன அந்த இளைஞர், அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவின் நிலையை எண்ணி வருந்தி, அதற்கு மாற்று ஆயுதப்புரட்சிதான் என்று துணிந்து பல்வேறு செயல்களை ஆங்கிலேயருக்கு எதிராகச் செய்துவந்தார். அதன்காரணமாகக் கைது செய்யப்பட்டார். அவருக்குத் தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது.  நாளை விடிந்தால் அவருக்க...

ஆடிப்பட்டம் தேடி விதை…

படம்
  நம் பண்டையத் தமிழர்கள் பன்னிரெண்டு மாதங்களை ஆறு பருவங்களாகப் பிரித்து வைத்திருந்தார்கள். இதற்குப் பெரும்பொழுது என்று பெயர். அந்த ஆறு பருவங்கள் எவை என்றால்,  1. சித்திரை, வைகாசி - இளவேனில் 2. ஆனி, ஆடி - முதுவேனில் 3. ஆவணி, புரட்டாசி  - கார்காலம் 4. ஐப்பசி, கார்த்திகை - கூதிர்காலம் 5. மார்கழி, தை - முன்பனிக்காலம் 6. மாசி, பங்குனி - பின்பனிக்காலம் என்பவையாகும். முதுவேனிற் காலமாகிய இந்த ஆடிமாதத்தில்தான் சூரியன் தெற்குநோக்கி நகர்கின்ற தட்சிணாயணக் காலம் வருகின்றது. இதே சூரியன் தை மாதம் தொடங்கும்போது வடக்குநோக்கி நகர்வதால் அது உத்திராயணக் காலம் என அழைக்கப்படுகிறது.  ஆடி மாதத்தைப் பொறுத்தவரை பல்வேறு சிறப்புகள் இம்மாதத்திற்கு உண்டு. மழைக்குரிய பருவகாலம் தொடங்கவிருப்பதால் ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பது விவசாயிகளின் பேச்சு வழக்கு. இந்த ஆடிமாதத்தில் காற்று தொடர்ந்து வீசுவதால் ‘ஆடிக்காத்துல அம்மியும் பறக்கும்’ என்பது கிராமத்துப் பழமொழி.  வேளாண்மை தொடங்குகின்ற காலமாதலால் பணப்புழக்கம் குறைவாக இருக்கும், விவசாய வேலைகள் தொடங்கி இருக்கும். இதனால்தானோ ...

கழுகுமலையும்… எல்லோரா குகைக்கோயிலும்…

படம்
               தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல் மலைக்குகையில் அமைந்துள்ள சமணப்பள்ளிக்குப் போயிருந்தபோது அங்கிருந்த ஓவியங்களைப் பார்த்தும் நான் வியந்துபோனேன். இந்த வண்ணங்கள் எங்கிருந்து கிடைத்தன? என்று நான் கேட்டபோது, அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவர் எனக்கு அந்த அதிசயத்தைக் காண்பித்தார்.                என்னை அழைத்துக்கொண்டு அந்தக் மலைகுகைக்கு அருகிலிருந்த சின்னக் காட்டுக்குள் போனார். ஏதோ ஒரு மூலிகை போன்ற செடியிலிருந்து சில பச்சை இலைகளைப் பறித்து அதைக் கசக்கி என் கைகளில் அவர் தடவ, என் கை மருதாணி வைத்ததுபோலச் சிவந்து போனது. அவர் கையும் சிவப்பானது.                ‘இந்தக் கலரு மூணு நாளைக்கு உங்க கையில இருக்கும்’ என்று அவர் பெருமையாகச் சொல்லியதோடு, இது மாதிரி ஆயிரக்கணக்கான செடிகள் இந்தப் பகுதியில் இருக்கின்றன. இவற்றின் சாறுகளை வைத்துதான் குகைக்குள் இருக்கின்ற ...

சிலேடை விருந்து

படம்
தமிழ்மொழிக்கு இனிமை தருவன   உவமை, உருவகம், சொல்லடுக்கு, சந்தப்பாக்கள், உயர்வு நவிற்சி, சிலேடை   என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு மொழியும் இவ்வாறு தனக்கெனத் தனிச்சிறப்பைப் பெற்று விளங்கத்தான் செய்யும். தமிழில்  ‘இரட்டுற மொழிதல்’   அல்லது   ‘சிலேடை’  என்பது கேட்டுக் கொண்டிருப்பவர்களை, வாசிப்பவர்களைத் தன் வயப்படுத்தும் தன்மை உடையது எனச் சொல்லலாம். இச்சிலேடை, செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச் சிலேடை என இருவகைப்படும். இதில் செம்மொழிச் சிலேடை கற்றவர்க்கு மட்டும் எளிதில் விளங்குவது, மற்றது கல்லாதவரும் எளிதில் புரிந்து கொள்ளுமாறு தெளிவாய் அமைவது. ஒருசொல், இருபொருள் தருமாறு வருவதே இரட்டுற மொழிதலாகும். மேடைக்கலையில் வல்லவர்களான  கி.வா.ஜெகந்நாதன், கிருபானந்த வாரியார்  போன்றோருடைய பேச்சில் மிகச் சரளமாகச் சிலேடைச் சொற்கள் புகுந்துவரும். ஒருமுறை கி.வா.ஜெகந்நாதன் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசுவதற்காகச் சென்னையிலிருந்து கிளம்பி அதிகாலை நேரத்தில் தான் பேசவேண்டிய ஊருக்கு வந்து சேர்ந்தார். ரயில் நிலையத்தில் அவரை வரவேற்க வந்தவர்கள், அழகிய பூமாலை ஒன்றை அவருக்கு அணிவித்...