இடுகைகள்

கி.ஆ.பெ.விசுவநாதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்

படம்
  முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்   அவர்களைச் சந்திக்கிற அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்தபோது அவர் ஒருமுறை  சொற்பொழிவு ஆற்றுவதற்காகப் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்திருந்தார். அவருடைய முதிர்ந்த பருவமும், அப்போதும்கூட அவர் பேருந்தில் பயணம்செய்த அந்தத் தன்மையும், உணவு உண்ணும்போது அவர் எடுத்துக்கொண்ட முன்னெச்சரிக்கைகளும் எங்களையெல்லாம் வியப்பில் ஆழ்த்தின. மதியஉணவு உண்ண அனைவரும் அமர்ந்திருந்தபோது அவர் எந்த உணவையும் ஏற்றுக்கொள்ளாமல் சாதத்தை மட்டும் இலையில் வைக்கச் சொன்னார். பின்னர் தன்னுடைய கைப்பெட்டியிலிருந்து பருப்புப்பொடி, சிறிய நல்லெண்ணெய் பாட்டில், மாங்காய் ஊறுகாய் இவற்றை எடுத்து மேஜையில் வைத்துக்கொண்டார். அந்தச் சாதத்தில் பருப்புப்பொடியைப் போட்டு எண்ணெய்விட்டுப் பிசைந்து சாப்பிட்டுவிட்டு, மோர் வாங்கி ஊறுகாயோடு உணவை முடித்துக்கொண்டார். அவர் உணவை உண்ட அழகும், முறையும் என் கண்முண்னே என்றும் இருக்கின்றன. பிறகு மேடைக்குச் செல்லும்முன்னர் மாணவ, மாணவிகளையெல்லாம் அழைத்து, ‘எங்கே என் கேள்விக்குப் ப...