இடுகைகள்

மகாகவி பாரதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எட்டயபுரத்துக் கட்டபொம்மன் பாரதி…

படம்
  ‘எட்டயபுரத்துக்  கட்டபொம்மன்’   என்று மகாகவி பாரதியைக் கவிராஜன் கதையில் அவர் வரலாற்றை எழுதிய   கவிப்பேரரசு  வைரமுத்து   குறிப்பிடுவார். சின்னச்சாமி பெற்ற பெரியசாமி என்றும், லட்சுமி பெற்ற சரஸ்வதி  என்றும் கவியரங்கங்களில் பாரதியைப் போற்றிப் பாடுவர். மறைந்து நூறு ஆண்டுகள்   (1921 – 2021) சென்றபோதும் மறையாத புகழுடைய மகாகவிஞன் பாரதி. இவர் பலமொழிகளைக் கற்ற பன்முகத் தன்மையுடையவர். எட்டயபுரத்தில் பிறந்ததால் தமிழ், பாளையங்கோட்டையில் படித்ததால் ஆங்கிலம், காசியில் நான்கு ஆண்டுகள் இருந்ததால் ஹிந்தி, சமஸ்கிருதம், பாண்டிச்சேரியில் (1908 – 1918) பத்து ஆண்டுகள் வாழ்ந்ததால் பிரெஞ்சு மொழி என உள்௵ர் மொழிகள் முதல் உலகமொழிகள் வரை பாரதி பலமொழிகளைக் கற்று அறிந்திருந்தபோதிலும்,  “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்”  என்று நெஞ்சை நிமிர்த்துப்பாடிய பெருமையை உடையவர் பாரதி. மதுரையில் ராஜா சேதுபதி பள்ளியில் 1901ஆம் ஆண்டில் நான்கு மாதம் தமிழாசிரியராகப் பணியாற்றிய காலம் மதுரைக்கு ஒரு இனிய காலம் . அப்போதுதான் அவர் காசியிலிருந்து தன் மனைவியா...