இடுகைகள்

புதிய பார்வை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதிய பார்வை

படம்
                   பார்வை என்பது மனிதர்களுக்கு மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. தவிரவும், கண்ணின் பயன்பாடு கல்விக்கான வழி எனவும் காலங்காலமாகக் கூறப்பட்டு வருகின்றது. ஆயினும் பார்வையற்ற மனிதர்கள் இவ்வுலகத்தில் வாழமுடியாதா என்றால் முடியும். இன்னும் சொல்வதாக இருந்தால் ஐம்புலன்களில் ஏதேனும் ஒரு புலன் குறைவாக உள்ளவர்கள் கூட எத்தனையோ சாதனைகள் படைத்திருப்பதை நாம் வரலாற்றில் காண்கிறோம்.                மிகப்பெரிய சாதனைகளைச் செய்த ஹெலன் ஹெல்லர், ஒன்றரை வயதுக் குழந்தையாக இருந்தபோது மிகக் கொடுமையான விஷஜுரத்தால் தாக்கப்பட்டு பார்க்கவும், கேட்கவும், பேசவும் முடியாத நிலைக்கு ஆளானார். பெண்குழந்தையாக இருந்தபோதும்; இடைவிடாத முயற்சியின் காரணமாக எழுத்தாளராக, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பவராகப் பல சாதனைகளைப் புரிந்துள்ளார்.    ஒருமுறை திண்டுக்கல்லுக்கு அருகேயுள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் ரோட்டரி சங்கத்தின் சார்பாக ஒரு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு சிறப்ப...