இந்தோனேசியா தமிழ்ச்சங்கத்தில் கமல்ஹாசன்…!
இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் உள்ள தமிழ்ச்சங்க இரண்டாம் ஆண்டு விழாவிற்கு நீங்கள் வந்திருந்து சிறப்புரை ஆற்ற வேண்டும்’ என்ற அழைப்பு வந்தபோது, நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. நாம் சிறு வயதில் படித்த ‘ கடல் புறா’ ‘ பொன்னியின் செல்வன்’ போன்ற நாவல்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களிலும் சொல்லப்பட்ட அற்;புதமான தீவுக் கூட்டங்களைக் காணப்போகிறோம் என்று! அந்தமான், நிகோபார், ஜாவா, சுமத்திரா என்னும் தீவுக் கூட்டங்கள் முந்நீர்ப்பழந்தீவுகள் என இலக்கியங்களில் கூறப்படும் தீவுக் கூட்டங்களில் ஒன்றான ‘ ஜாவா’ எனும் பெரும் தீவே தற்போது இந்தோனேசியா என்ற பெயரிலும், அதன் தலைநகர் ஜகார்த்தா என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றது. ‘ சாவகம்’ என்னும் தீவு, மணிமேகலை எனும் காப்பியத்தில் குறிப்பிடப்படுகிறது. இத்...