இடுகைகள்

கா.ஸ்ரீ.ஸ்ரீ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழகக் காண்டேகர்… கா.ஸ்ரீ.ஸ்ரீ

படம்
  நான் பள்ளியில் படிக்கிற காலங்களிலும் (சோழவந்தான் – முள்ளிப்பள்ளம் அரசுப் பள்ளி) பின்னர் கல்லூரிக் காலங்களிலும் மொழிபெயர்ப்பு நூல்களை விரும்பிப் படிப்பேன். அவ்வாறு நான் படித்த இந்தியமொழி நாவல்களுள் மராத்திய எழுத்தாளரான காண்டேகர் அவர்களுடைய நாவல்களை நான் மட்டுமில்லை, அந்தக்காலத்தில் தமிழக வாசகர்களே மிக விரும்பிப் படித்தார்கள். அப்படி அனைவரையும் படிக்க வைத்த பெருமை   காஞ்சிபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசன்   அவர்களையே சாரும். ஆம் இவர்தான்   கா.ஸ்ரீ.ஸ்ரீ .   இவர்   உத்திரப்பிரதேசத்தில் உள்ள பிருந்தாவன்   என்ற ஊரில் 1913ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி பிறந்தார். தமிழ்நாட்டில் சென்னையில் இவர் வாழ்ந்தபோது, காந்தியடிகள் அகில இந்திய எழுத்தாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்னைக்கு வருகைதந்தாராம்.அப்போது  தமிழ்த்தாத்தா  என்றழைக்கப்படுகின்ற  உ. வே. சாமிநாதய்யர்  அவர்கள் காந்திஜி அவர்களுக்குத் தமிழில் வரவேற்புரை எழுதி வாசிக்க, அதை ஹிந்தியில் மொழிபெயர்த்து வாசித்த பெருமை கா.ஸ்ரீ.ஸ்ரீ.அவர்களுக்குத்தான் கிடைத்தது. அதன்மூலம்  உ. வே....