இடுகைகள்

ஆகஸ்ட் 16, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நிதானமாய்க் குளிப்பதும் தியானம்தான்…

படம்
‘அந்தக் காலத்திலே அப்போ எப்படி இருந்துச்சு தெரியுமா?’ இப்படி ஒப்பிட்டுச் சொல்லி, அலுத்துக் கொள்பவர்கள் நிறையப் பேர் நம்மிடையே இருக்கிறார்கள். காலமாற்றத்தை நாம் எப்படி உணர்கிறோம் என்பது முக்கியம். இரண்டாயிரம் வருஷமாக நிதானமாக நகர்ந்த வளர்ச்சியை நவீனத் தொழில் நுட்பம், கடந்த பத்திருபது ஆண்டுகளுக்குள் புகுந்து முழுக்க மாற்றியமைத்து விட்டது. நாங்கள்கூட பட்டிமன்றத்தில் விளையாட்டாக இப்படிச் சொல்வோம். ‘முன்னாடி மாவாட்டும்போது உரல் அப்படியே இருக்கும், குழவி சுற்றும். இப்போது குழவி அப்படியே இருக்கிறது கிரைண்டரில், உரல் அதைச் சுற்றுகிறது. இது இந்தக் காலம். விளம்பரங்களில்கூட இப்போது மாற்றம். முன்பு பெண்கள் அறையில் குளிக்க, ஆண்கள் காற்றாடக் குளிப்பார்கள். குறிப்பிட்ட ஒரு சோப் விளம்பரத்தில் ஆண் பாத்ரூமில் குளிக்கிறான். இன்னொரு விளம்பரத்தில் ஒரு பெண் நீர்வீழ்;ச்சியில் அட்டகாசமாகக் குளிக்கிறாள். இது இந்தக் காலம். அரசியலிலுள்ள மாற்றத்தைப் பற்றி தமிழ் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் பேசினார்.  முன்பு சாக்பீசால் எழுதிப் போடப்பட்ட கரும்பலகையைப் பார்த்துப் படித்த குழந்தைகள்,...