பூமிக்கு வந்த புதுமைப்பித்தன்;…. லியோனார்டோ டாவின்சி…
இந்த உலகம் இறைவனால் படைக்கப்பட்டிருந்தாலும் இயற்கையால் ஒன்றிணைந்;திருந்தாலும் இதனை அழகுபடுத்திய பெருமையும், அடுத்த கிரகங்களை நாடுகின்ற முயற்சியும் அறிவியல் அறிஞர்களால் கைகூடியது என்பது மறுக்க முடியாத உண்மை. கலிலியோ, கோபர்நிகஸ், லியோனார்டோ டாவின்சி, டெஸ்லா, தாமஸ் ஆல்வா எடிசன், ரைட் சகோதரர்கள் என ஒவ்வொருவரும் மனிதகுலத்தின் பல்வேறு உயர்வுக்குக் காரணமாய் இருந்தார்கள். இதேபோல கிப்போகிரேட்ஸ் தொடங்கி, தமிழகத்தில் தோன்றிய உடற்கூற்று அறிஞர்கள் முதல் தற்காலத்தில் உறுப்புமாற்று சிகிச்சை மூலம் மனிதவாழ்க்கையை நீட்டித்துக் கொண்டிருக்கும் மருத்துவ மாமேதைகளின் பங்கினையும் நாம் மறக்கமுடியாது. ஜேம்ஸ் வாட், ஜார்ஜ் ஸ்டீபன்சன், ஹென்ரி போர்டு போன்றவர்கள் வாகனக் கண்டுபிடிப்புகள் மூலம் மனிதர்களின் பயணநேரத்தை விரைவாக்கித் தூரங்களைக் குறைவாக்கி உலகை வியக்க வைத்தார்கள். அலெக்சாண்டர் பிளம்மிங்கும், லூயி பாஸ்டரும், எட்வர்ட் ஜென்னரும், மேரி கியூ...