இடுகைகள்

ஏப்ரல், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரயிலே…. ரயிலே…

படம்
இன்றைக்கும் ரயில் என்றாலே உற்சாகம்தான். அதிலும் ரயில் ஸ்டீம்என்ஜினாகப் புகைவிட்டுக்கொண்டு குப்…குப்… என்று கிளம்பி, வேகம் எடுத்துச் செல்வதைப் பார்க்கையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஒரே ஆனந்தம்தான்.                நீராவியின் சக்தியை அறிந்த  ‘ ஜேம்ஸ்  வாட்டும்’ , நீராவி என்ஜினைக் கண்டுபிடித்த  ‘ ஜார்ஜ்  ஸ்டீபன்ச’ னும்  இன்றைய நவீன ரயிலை நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.                அதிலும், நம்மூரில் மரவட்டைக்குப் பெயர், ரயில் வண்டிப்பூச்சி. சிறுவர்கள் விளையாடும் விளையாட்டிற்குப் பெயர் ரயில் விளையாட்டு என்று, ரயில் நம் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட ஒரு உயிர்ப் பொருளாகிவிட்டது.                அந்தக்காலத்தில்  ‘ நல்லதம்பி ’ படத்தில் கலைவாணர் N.S.கிருஷ்ணன் அவர்கள் ‘நந்தனார்’ என்ற பழைய கதையை காலத்திற்கேற்ப மாற்றி, ‘க...

படங்களும்… பாடங்களும்…

படம்
கவிதைகள், நாடகங்கள், சிறுகதைகள், திரைப்படங்கள், புத்தகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், சிற்பங்கள், ஓவியங்கள், இசை என படைக்கப்படுகின்ற எல்லாமே பொழுது போக்குவதற்காகவா? அல்லது பயன்பாட்டிற்காகவா? அதாவது கலை என்பது கலைக்காகவா? மக்களுக்காகவா? என்ற பட்டிமன்றத் தலைப்பு ஒன்று வெகுகாலமாகவே, ரசிகர்கள், படைப்பாளிகள், விமர்சகர்கள் மத்தியில் காரசாரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.                ‘எந்த ஒரு படைப்பும் ஏதாவது ஒரு பயனைத் தரவேண்டும்’ என்கின்றனர் சிலர்.                ‘படைப்பை ரசித்து மகிழ வேண்டுமே, தவிர, ஆராய்ச்சி செய்து குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது’ எனச் சொல்கின்றனர் சிலர்.                உதாரணமாக, ஒரு செடியில், வாசனை பொருந்திய, வண்ணங்கள் நிறைந்த மலர் பூத்திருக்கிறது என்றால் அதனை ரசிக்க வேண்டும். ரசனைதான் முக்கியம் என்று சிலர் சொல்ல… அந்தப் பூ பூப்பதே காயாகிப், பழமாகி, விதை ...

இலக்கியங்கள் என்ன செய்யும்?…

படம்
ஒருநாள் கல்லூரியில் சிறப்புத்தமிழ் படிக்கின்ற மாணவர்களுக்காக வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தேன். ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னிடத்தில் கேட்கலாம் என்று சொன்னேன். யாரும் பேசவில்லை, வகுப்பில் மயான அமைதி நிலவியது.                பிறகு நான் அவர்களை நோக்கிப், பாடம் தொடர்பாக வேண்டாம். பொதுவான சந்தேகங்கள் எதுவானாலும் கேளுங்கள் என்று  சொன்னவுடன், ஒரு மாணவி எழுந்தாள்… “ஐயா, எம்.பி.பி.எஸ் படிக்கும் மாணவர் டாக்டர் ஆகிறான். பொறியியல் படிப்பவர்கள் இன்ஜினியர் ஆகிறார்கள். சட்டம் படிப்பவர்கள் நீதிபதியாக, வழக்கறிஞராக ஆகிறார்கள். தமிழ் படிப்பதால் என்ன லாபம், இலக்கியம் படித்தால் என்ன ஆகலாம்?” என்று அந்தப் பெண் கேட்டவுடன் வகுப்பே கலகலப்பானது. நான் சற்று அதிர்ச்சியடைந்தேன்.                ஏனென்றால் பொதுவாக எந்த வழியும் இல்லாதவர்கள் வேறு வழி இல்லாமல் கடைசி முயற்சியாக இலக்கியத்தில் வந்து சேருவது போலவும், மொழிப் பாடங்கள் படிப்பது பயன் அற்றது போலவும், ஒரு கரு...

பனையோலைகளும்… புதிய வலைதளங்களும்…

படம்
      உலகப் புத்தகத் திருநாள் மனித வர்க்கத்தின் அறிவுத்திருநாள் என்றே சொல்லலாம். ஒவ்வொரு புத்தக நூல்நிலையமும், அறிவுத் திருக்கோயில்கள்தாம்.                மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே மிகச்சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம்தான் என்கின்றார் ஒரு மேல்நாட்டு அறிஞர். இத்தகைய புத்தகங்கள் ஒருகாலத்தில் ஓலைகளில் எழுதப்பட்டு வந்தன. அந்த ஓலைகளைத் தமிழ் கற்ற சான்றோர்களும், ஆன்மீகத் திருமடங்களும் பேணிப் பாதுகாத்து வந்தன.                புலவர்களும், எழுத்தாணி கொண்டு பனைஓலைகளில் எழுதும் பயிற்சி உடையவர்களும் இருந்ததால் இப்பனைஓலைகள் காலங்காலமாய் படியெடுக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன. அதுவும் அந்தக்காலங்களில் புள்ளி எழுத்துக்கள் கிடையாது. நெடில் குறில் வேறுபாடுகளைப் பிரித்தறிவது கடினமாக இருந்தது. வீரமாமுனிவர் போன்ற மேல்நாட்டு கிறித்தவப் பாதிரிமார்கள் தமிழ்கற்று எழுத்துச் சீர்திருத்தம் செய்து  ‘ சதுரகராதி’  எனும் அகராதியை உருவாக்கித் தம...

புழுங்கலரிசி எந்த நெல்லில் இருந்து உருவாகுது?

படம்
             பச்சரிசி எந்த நெல்லில் இருந்து உருவாகுது ?  புழுங்கலரிசி எந்த நெல்லில் இருந்து உருவாகுது ?  சொல்லுங்க…’                ஒருநாள் வகுப்பில் இதை நான் கேட்டபோது, உட்கார்ந்திருந்த மாணவர்களில் 35 மாணவர்களுக்கு விடை தெரியவில்லை. ‘பச்சரிசி ஒரு மாதிரியான பயிர்’ என்று சொன்னான் ஒரு மாணவன். பலர் சத்தியமாகத் தெரியாது என்று சொல்லிவிட்டார்கள்.                அரிசியை அவித்தால் புழுங்கல், அப்படியே விட்டால் பச்சரிசி என்பது கூடத் தெரியாததற்குக் காரணம் – விவசாயத்திற்கும் இன்றைய மாணவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.                ஒரு நெல் எப்படி விளைகிறது? நெல்லில் இருக்கிற வகை என்ன? விதை பாவுவது, நாற்று நடுவது, களை எடுப்பது என்று ஏதாவது தெரிய வைத்திருக்கிறோமா? அடிப்படையில் நமது நாடு விவசாய நாடு என்று சொல்கிறோம். ஆனால் நம்முடைய கல்வி...

பூமிக்கு வந்த புதுமைப்பித்தன்;…. லியோனார்டோ டாவின்சி…

படம்
இந்த உலகம் இறைவனால் படைக்கப்பட்டிருந்தாலும் இயற்கையால் ஒன்றிணைந்;திருந்தாலும் இதனை அழகுபடுத்திய பெருமையும், அடுத்த கிரகங்களை நாடுகின்ற முயற்சியும் அறிவியல் அறிஞர்களால் கைகூடியது என்பது மறுக்க முடியாத உண்மை. கலிலியோ,  கோபர்நிகஸ்,  லியோனார்டோ  டாவின்சி,  டெஸ்லா,  தாமஸ்   ஆல்வா  எடிசன்,  ரைட்  சகோதரர்கள்  என ஒவ்வொருவரும் மனிதகுலத்தின் பல்வேறு உயர்வுக்குக் காரணமாய் இருந்தார்கள். இதேபோல  கிப்போகிரேட்ஸ்  தொடங்கி, தமிழகத்தில் தோன்றிய உடற்கூற்று அறிஞர்கள் முதல் தற்காலத்தில் உறுப்புமாற்று சிகிச்சை மூலம் மனிதவாழ்க்கையை நீட்டித்துக் கொண்டிருக்கும் மருத்துவ மாமேதைகளின் பங்கினையும் நாம் மறக்கமுடியாது. ஜேம்ஸ்  வாட்,  ஜார்ஜ்  ஸ்டீபன்சன்,  ஹென்ரி  போர்டு  போன்றவர்கள் வாகனக் கண்டுபிடிப்புகள் மூலம் மனிதர்களின் பயணநேரத்தை விரைவாக்கித் தூரங்களைக் குறைவாக்கி உலகை வியக்க வைத்தார்கள்.  அலெக்சாண்டர்  பிளம்மிங்கும்,  லூயி  பாஸ்டரும்,  எட்வர்ட்  ஜென்னரும்,  மேரி  கியூ...

சுபகிருது என்னும் நற்செய்கை

படம்
உலகெங்கும் இருக்கிற இனிய தமிழ் மக்களுக்குச் சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! தமிழ் வருடங்கள் பிரபவ எனத் தொடங்கி அட்சய என அறுபது ஆண்டுகளாக நிறைவுறுகின்றன.  ஒரு மனிதருடைய வாழ்க்கையில் அவர் பிறந்த தமிழ்ஆண்டு மீண்டும் வருமானால் அவருக்கு வயது 60 நிரம்பிவிட்டது என்பது பொருள். சான்றாக நான் பிறந்த தமிழாண்டு மன்மத ஆண்டு. அது மீண்டும் வந்தபோது என்னுடைய 60ஆவது வயதில் நான் என்னுடைய மனைவியோடு திருக்கடையூர் சென்று இறைவனை வணங்கி வந்தேன்.  அத்திருக்கடையூர் எம்பெருமானாகிய சிவபெருமான் மார்க்கண்டேயனைக் காப்பாற்றுவதற்காகக் காலனாகிய எமனை வீழ்த்திய தலம். அதனால் சிவபெருமானுக்குக் காலகாலமூர்த்தி என்ற சிவநாமமும் உண்டு.  இந்த அறுபது ஆண்டுகளில் இப்போது பிறந்திருக்கும் ஆண்டின் பெயர் சுபகிருது ஆண்டு. இதற்கு நற்செய்தி, நற்செயல் என்பது பொருள் எனப் பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது. இச் சுபகிருது ஆண்டு இதற்கு முன்னதாய் 1962இல் வந்திருக்கிறது. அப்போது இந்தியாவின் பிரதமராக பண்டித ஜவஹர்லால் நேரு இருந்திருக்கிறார். சீனப்படையெடுப்பும் இந்தியாவின் மீது நிகழ்ந்திருக்கிறது. நான் அப்போது பள்ளியில் இரண்...

பாட்டுக்கோட்டை… பட்டுக்கோட்டை…

படம்
         கவிஞர்  வாலி  அவர்கள்  ஸ்ரீரங்கத்தில்  இருந்து திரைப்படத்தில் பாடல்கள் எழுதுவதற்காகச் சென்னைக்குச் செல்கிறார். ஏற்கனவே திரைத்துறையில் இருந்த  நடிகர்  வி. கோபாலகிரு ஷ் ணன்  தனது அறையில் இவரைத் தங்கவைத்து கவிஞர் வாலிக்காக, வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தார். அவரது அறையில் இவரைப்போலவே திரைப்பட வாய்ப்புத்தேடி பல நண்பர்கள் வருவது வழக்கமாம்.        அப்படி வந்துபோனவர்களில் ஒருவர் ஒரு துணிப்பையை வைத்துவிட்டு மாலையில் வருகிறேன் என்று வாலியிடம் சொல்லிவிட்டுப் போனாராம். அவர் தந்துவிட்டுப் போன துணிப்பையிலிருந்த நோட்டுப்புத்தகத்தில் சில கவிதை வரிகள் இருப்பதைக் கவனித்த வாலி அதைப் படித்துப் பார்த்து மகிழ்ந்து போனாராம். அதில் ஒரு கவிதை,                 அம்பது  பைசா  நிக்கிறமாதிரி  மீச  வச்சான்                 அவன்  தோச  விக்கி...

ஞானம் வந்திருச்சு…

படம்
      இப்போதைய அன்றாட வாழ்வில் எவ்வளவோ நெருக்கடிகள். அவசரங்கள். இதனால் மனஇறுக்கம் கூடி விடுகிறபோது இதிலிருந்த நம்மை விடுபட வைப்பது நகைச்சுவை உணர்வே.      அதுதான் நம் மனசை லேசாக்குகிறது. நம் பிரச்சனைகளை இறகுபோல உணரவைக்கிறது. எல்லோருக்குமே இயல்பாக நகைச்சுவை உணர்வு இருக்கி;றது. இல்லை என்றால் ரசிக்க முடியாது.    நகைச்சுவைக்கென்று சூழலும் மனநிலையும் முக்கியம். சில திரைப்படங்களில் ஒரு நகைச்சுவை நடிகர் தோன்றியதுமே சிரித்து விடுவார்கள். பழைய படமாகிய  ‘ புதுமைப்பித்தன்’  னில் ஒரு காட்சி. படம் ஆரம்பித்ததும் கப்பலைக் காட்டுவார்கள். கொடியை அதில் ஏற்றும்போது, தலைகீழாக மேலே போவார் சந்திரபாபு. அந்தக் காட்சியே சிரிப்பதற்கானச் சூழலை உருவாக்கிவிடும்.      திருச்சி பேராசிரியராகிய ராதாகிருஷ்ணன் அவர்கள் தலையில் கட்டுக்குடுமி வைத்திருப்பார். மேடையில் தன்னைத்தானே அறிமுகப்படுத்தும்போதே; இப்படி ஆரம்பிப்பார். ‘தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்டில் ஒரு தடவை போய் இறங்கினதுமே ஒருத்தன் வந்து என்னைக் கும்பிட்டான். ‘என்னை நீ பார்த்திருக்கிறாயா?’...

கலைமகளுக்கே ஆசிரியர்… கி.வா.ஜ.,…

படம்
    தமிழில் சிலேடை என்பது ‘ இரட்டுற மொழிதல் ’ என்ற பொருளில் வரும் . அக்காலத்தில் சிலேடையாகப் பாடுவதில் காளமேகப்புலவர் வல்லவர் . பேச்சில் சிலேடை தொனிக்கப் பேசுபவர்கள் தம் பேச்சால் அனைவரையும் ஈர்ப்பர் . அத்தகைய வல்லமை பெற்றவர்களில் ஒருவர்தான் கி . வா . ஜகந்நாதன் அவர்கள் . இவர் மிகச்சிறந்த எழுத்தாளர் , பேச்சாளர் என்பதோடு பத்திரிக்கை ஆசிரியராகவும் இருந்தார் .   ஒருமுறை இவருடைய நண்பர் இவரைப் பாராட்டிப் பேசும்போது ‘ உங்களுக்குக் கிடைத்த புகழ் யாருக்குக் கிடைக்கும் ’ என்றாராம் . அதைக் கேட்டு கி . வா . ஜ . வியப்போடு , ‘ என்ன புகழ் ?’ என்று கேட்க , ‘ நீங்கள் கலைமகளுக்கே ஆசிரியராயிற்றே ’ என்று புன்னகையோடு சொன்னாராம் . கேட்ட கி . வா . ஜ . வின் முகத்திலும் புன்னகை .   இவரின் சிலேடைகள் இடத்திற்கும் நேரத்திற்கும் ஏற்றபடி அமையும் . ஒருமுறை இவர் ஒரு ஊருக்குப் பேசுவதற்காக இரயிலில் சென்றாராம் . காலைநேரத்தில் இரயில் அந்த ஊரில் போய் நிற்க , இவரை வரவேற்க வந்தவர்கள் , பெரிய மாலையைக் கொண்டுவந்து இவர் கழுத்த...