இடுகைகள்

gnanasambandanblog லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அஜந்தா ரகசியம்…

படம்
    சென்ற மே மாதத்தில் டில்லி மற்றும் புனே தமிழ்ச்சங்கங்களின் அழைப்பின்பேரில் நானும் என் துணைவியாரும் அங்கு சென்றுவிட்டு புனேயிலிருந்து ஷுரடிக்குப் போய் பாபாவையும் தரிசித்துவிட்டு எனது அன்பிற்குரிய தம்பி மகன் கணினிப் பொறியாளர்  திருமிகு.  ரவி  மற்றும் அவர்கள் குடும்பத்தாரோடு  எல்லோரா,  மற்றும்  அஜந்தா  போன்ற இடங்களுக்குச் சென்று வந்தோம்.                  ‘ சிவகாமியின்  சபதம்’  நாவலை நான் சிறுபிள்ளையாக இருந்தபோது படிக்கத் தொடங்கி, இன்றுவரை படித்து வருகிறேன். அதில் கதாநாயகியாகிய சிவகாமியின் தந்தையான  ஆயனசிற்பி  அஜந்தா ஓவியங்களின் வர்ண ரகசியத்தை அறிந்துகொள்ள அந்த நாவல் முழுவதும் முயற்சிப்பார்.  மகேந்திர  பல்லவன்,  நரசிம்ம  பல்லவன்,  அவர்களின்  தளபதி  பரஞ்சோதியார் ( பிற்காலத்தில்  இவர்தான் 63 நாயன்மார்களில்  ஒருவராகிய  சிறுத்தொண்டர்)  ஆகியோர் மூலமெல்லாம் அந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ள மு...

சக்தி தருவாய் சக்தி…

படம்
               இந்த உலகத்தில் நம்மை அறிமுகப்படுத்துவதும், உலகத்தாரை நமக்கு அறிமுகப்படுத்துவதும் தாய்தானே! அவளின்றி ஓர் அணுவும் அசையாது. தாயின்றி உலகம் தனித்து இயங்காது. தாய்ப்பாசம் என்பது உலகில் பிறந்த அத்தனை உயிரினங்களுக்கும் உண்டு. இதில் உயர்திணை, அஃறிணை பேதமில்லை. நிலத்தில், நீரில், ஆகாயத்தில் என எங்கு வசிக்கும் உயிரினங்களுக்கும் உற்ற துணை தாய்தான்.                உலகைத் துறந்த சந்நியாசிகள்கூட தாய்ப்பாசத்தை மறக்கவில்லை.  ஆதிசங்கரர் , ‘ காலடி’  எனும் இடத்தில் தான் துறவு மேற்கொள்வதற்காகத் தாயிடம் அதற்கு ஒப்புதல் பெறும்பொருட்டு, ஒரு முதலைத் தன் காலைப் பிடித்துக்கொள்வது போலவும் சந்நியாசத்தை மேற்கொண்டால்தான் பிடித்த காலை விடமுடியும் என்று அந்த முதலை சொல்வதாகக் கூறித், தாயின் ஒப்புதலைப் பெறுகிறார். அப்போதும்கூட ‘உன் கடைசிக் காலத்தில் உன்னைக் காண வருவேன்’ என்று வாக்குறுதியும் தந்து அதை நிறைவேற்றவும் செய்கிறார்.      ...

ஜி.யூ.போப்

படம்
  சமயப்பணி செய்ய இந்தியாவுக்கு, குறிப்பாகத் தமிழகத்துக்கு வந்த அயல்நாட்டுக் கிறிஸ்தவப் பாதிரிமார்கள் பலரும் தமிழ்மொழியைக் கற்று, அதன் அருமையை உணர்ந்து சமயப் பணியோடு, தமிழ்ப் பணியையும் சிறப்பாகச் செய்தனர். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதிய  கால்டுவெல் , தமிழில் உரைநடையை அறிமுகம் செய்து  தேம்பாவணி  என்ற நூலை எழுதிய  வீரமாமுனிவர்.   ரேனீஸ் ஐயர்  இவர்களோடு நினைக்கத்தக்க தமிழ்ப்பணியைத் தமிழுக்குச் செய்து 42 ஆண்டுகள் தமிழகத்திலேயே வாழ்ந்தவர்  ஜி.யூ.போப்  என்று அழைக்கப்படுகின்ற  ஜார்ஜ் யூக்ளோ போப்  ஆவார். ஜி.யூ.போப் 1820ஆம் ஆண்டு  பிரின்ஸ்  எட்வர்ட்  தீவில்  பிறந்தார். இவருடைய தாய் தந்தையார் பெயர்  ஜான்  போப் –  கேதரின்  யூக்ளோ  என்பதாகும்.  ஜி.யூ.போப்பின் உடன் பிறந்தவர்கள் பத்துப் பேர்களாவர். இவர் தமது 6ஆவது வயதில் தம் தாய் தந்தையரோடு இங்கிலாந்துக்கு அழைத்து வரப்பட்டார். சமயக்கல்வி அதிகம் போதிக்கப்பட்டது. சிறுவயதிலேயே கடவுளுக்குத் தொண்டு செய்யவேண்டும். சமயப்பணி ஆற்றவேண்டும் என்று விர...

புதுவை தந்த பூபாளம்… எழுத்தாளர் பிரபஞ்சன்

படம்
தமிழில், உரைநடையும் சிறுகதையும் தோன்றியபிறகு, இதழ்களின் வளர்ச்சி அதிகரிக்கத் தொடங்கின.   மணிக்கொடி,  எழுத்து,  ழா,  தீபம்   போன்ற இலக்கியஇதழ்கள்ஒருபுறமும்,   ஆனந்த  விகடன்,  கல்கி,  குமுதம்  போன்ற வெகுஜனப் பத்திரிக்கைகள் ஒருபுறமும், சிற்றிதழ்கள் ஒருபுறமும் சிறுகதை உலகின் வளர்ச்சிக்குப் பெரும் துணை நின்றன. எழுத்தாளர்  கல்கி,  சாண்டில்யன்,  தேவன்,  ரா. கி. ரங்கராஜன்  போன்றவர்கள் சிறுகதைகளில் தங்கள் எழுத்துத் திறமையை வெளிப்படுத்திக்கொண்டிருந்த அதேநேரத்தில்  புதுமைப்பித்தன்,  கு. அழகிரிசாமி,  ஜெயகாந்தன்  போன்றவர்களும் தங்களுக்கெனத் தனிப்பார்வையோடும், இடதுசாரிச் சிந்தனையோடும் எளிய மக்களின் உலகத்தைத் தங்கள் எழுத்துக்களில் படைத்துக் காட்டினர். இந்நிலையில்தான்  சாவி ( சா. விஸ்வநாதன் ) போன்ற பத்திரிக்கையாளர்கள் புதிய எழுத்தாளர் பட்டாளத்தைத் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தத் தொடங்கினர். (திரையுலகில் ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா போல) எழுத்தாளர்  சுஜாதா,  மாலன்,  சுப்பிரமணிய...

மயிலை தந்த மாமேதை…

படம்
  தமிழக இலக்கிய உலகில் எழுத்தாளர்களும், கவிஞர்களும் அறியப்பட்ட அளவு ஆராய்ச்சியாளர்கள்அறியப்படவில்லை. புனைகதை எழுத்தாளர்களையும், திரைப்படக் கவிஞர்களையும்தான் கற்றவர் முதல் மற்றவர்வரை அறிந்திருந்தனர். தமிழகத்தின் ஆய்வுலகில் தனக்கென ஒரு தடம் பதித்தவர்   மயிலை  சீனி.  வேங்கடசாமி. இவர் சென்னை மயிலாப்பூர் பகுதியில் 1900ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தையார் ஒரு சித்த மருத்துவர். இவருடைய இரண்டாவது அண்ணன்  சீனி.  கோவிந்தராஜன்  ஒரு தமிழறிஞர்.  திருக்குறள்  காமத்துப்பால்  நாட்கள்,  திருமயிலை  நான்மணி  மாலை  ஆகிய படைப்புகளை எழுதியவர். வேங்கடசாமி அவர்கள் கோவிந்தராஜனிடம் தமிழ் பயின்றார். பின்  மகாவித்வான்  சண்முகம்  பிள்ளை,  பண்டித  சற்குணர்  ஆகியோரிடம் தமிழ் படித்தார்.  பின்னர்  நீதிக்கட்சி  நடத்திய  திராவிடன்  இதழின்  ஆசிரியர் குழுவில் பணிக்குச் சேர்ந்தார். சிலகாலம் கழித்து, மயிலாப்பூரில் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்த இவர், வி...

தமிழகக் காண்டேகர்… கா.ஸ்ரீ.ஸ்ரீ

படம்
  நான் பள்ளியில் படிக்கிற காலங்களிலும் (சோழவந்தான் – முள்ளிப்பள்ளம் அரசுப் பள்ளி) பின்னர் கல்லூரிக் காலங்களிலும் மொழிபெயர்ப்பு நூல்களை விரும்பிப் படிப்பேன். அவ்வாறு நான் படித்த இந்தியமொழி நாவல்களுள் மராத்திய எழுத்தாளரான காண்டேகர் அவர்களுடைய நாவல்களை நான் மட்டுமில்லை, அந்தக்காலத்தில் தமிழக வாசகர்களே மிக விரும்பிப் படித்தார்கள். அப்படி அனைவரையும் படிக்க வைத்த பெருமை   காஞ்சிபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசன்   அவர்களையே சாரும். ஆம் இவர்தான்   கா.ஸ்ரீ.ஸ்ரீ .   இவர்   உத்திரப்பிரதேசத்தில் உள்ள பிருந்தாவன்   என்ற ஊரில் 1913ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி பிறந்தார். தமிழ்நாட்டில் சென்னையில் இவர் வாழ்ந்தபோது, காந்தியடிகள் அகில இந்திய எழுத்தாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்னைக்கு வருகைதந்தாராம்.அப்போது  தமிழ்த்தாத்தா  என்றழைக்கப்படுகின்ற  உ. வே. சாமிநாதய்யர்  அவர்கள் காந்திஜி அவர்களுக்குத் தமிழில் வரவேற்புரை எழுதி வாசிக்க, அதை ஹிந்தியில் மொழிபெயர்த்து வாசித்த பெருமை கா.ஸ்ரீ.ஸ்ரீ.அவர்களுக்குத்தான் கிடைத்தது. அதன்மூலம்  உ. வே....

ரஷ்ய எழுத்தாளர்…சிங்கிஸ் ஐத்மாத்தவ்

படம்
  நான் கல்லூரியில் படிக்கிறகாலத்தில் மொழிபெயர்ப்பு நாவல்கள் அதிகம் படிப்பேன். குறிப்பாக, இந்திய மொழிபெயர்ப்பாளர்களான   த.குமாரசாமி, ப.சேனாதிபதி மற்றும் க.ஸ்ரீ.ஸ்ரீ, மாயாவி, நாடோடி   போன்றோர் மொழிபெயர்த்த வங்க மொழியில் வெளிவந்த இலக்கியங்கள், மராட்டிய நாவல்கள், சிறுகதைகள் இவற்றைப் படிக்கிறபோது, புதுமையான பெயர்கள், புதுப்புது இடங்கள் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களின் உணவு, உடை பழக்கவழக்கங்கள் போன்றவற்றை இந்த மொழிபெயர்ப்பு நூல்கள் மூலமாக அறிந்து கொள்வேன். அக்காலத்தில்  நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தில்  (NCBH) ரஷ்ய நூல்கள் அதிகம் கிடைக்கும்.  ர ஷ் ய எழுத்தாளர்களான லியோ டால்ஸ்டாய், தஸ்தாவஸ்கி, சிங்கிஸ் ஐத்மாத்தவ், ஆன்டன் செகாவ்  ஆகியோரது படைப்புகள் மிக உயரிய பதிப்பாகவும், வழவழப்பான தாள்களில் அச்சிடப்பட்டும் அதற்கேற்ற ஓவியங்களோடும் குறைந்த விலையில் கிடைக்கும். சோவியத் நாடு, சோவியத் ரஷ்யா போன்ற பத்திரிக்கைகளும்  ‘கூரியர்’  போன்ற இதழ்களும் அப்போது அங்கே கிடைக்கும். இந்நூல்களில் குறிப்பாக  லியோ டால்ஸ்டாயின்,   ‘புத்துயிர்ப்பு’  என்னும...

ஒரு மரணவியாபாரியின் மரணம்… ஆல்பிரட் நோபல்

படம்
  2019ஆம் ஆண்டு நார்வே நாட்டிலுள்ள தமிழ்ச்சங்கத்தின்அழைப்பின்பேரில் நான் என் குழுவினரோடு பட்டிமன்றம் பேசுவதற்காக அந்நாட்டிற்குச் சென்றிருந்தேன். அந்த நாட்டுக்கு   ‘நள்ளிரவுச் சூரியன் நாடு’   என்றொரு பெயரும் உண்டு. அந்த நாட்டில் நாங்கள் பார்த்த மற்றொரு அதிசயம் எது தெரியுமா? உலகப்புகழ் பெற்ற நோபல் பரிசு கொடுக்கும் அரங்கம்தான். அந்த அரங்கம்; அரண்மனை போன்று மிகப்பிரம்மாண்டமாக அமைந்திருந்தது. அங்குதான் நோபல் பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெறும் என்று சொன்னார்கள். நாங்கள் அங்கு சென்று அந்த அரங்கைப் பார்த்ததோடு அதன் வாசலிலிருந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டோம். அப்போதுதான் ஆல்பிரட் நோபலைப் பற்றி ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டோம். இவர் வெடிமருந்தின்   (டைனமைட்)  மூலமாக மலைகளைத் தகர்க்கவும், பூமியைப் பிளப்பதற்குமான ஒரு வேதியியல் பொருளைக் கண்டுபிடித்தவர். அதன்மூலம் பெரும் பொருளையும் சம்பாதித்தவர் என்று ஒரு நண்பர்  சொன்னார். அப்போது ஆல்பிரட் நோபலைப் பற்றி நான் படித்த செய்திகளை நண்பர்களுக்குச் சொன்னேன். பெரும் பணத்தைச் சம்பாதித்த இவர் ஒருநாள் வீட்டில் அமர்ந்திருந்தபோது செய்த...

உலகமொழிகளை அறிவோம் மொழிபெயர்ப்புகள் மூலமாக…

படம்
                                  “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்                 தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்                 இறவாத புகழுடைய புதுநூல்கள்                 தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்” என மகாகவி பாரதியார் பாடியதுபோல்  இந்திய மொழிகளான மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, வங்கமொழி, குஜராத்தி  போன்றவற்றிலுள்ள இலக்கியங்களையும்,  உலகமொழிகளான ஆங்கிலம், பிரெஞ்சு, ர ஷ் யமொழி, ஜெர்மன், ஜப்பான், சீனம், உருது  போன்றவற்றில் உள்ள இலக்கியங்களையும் தமிழ்மொழியில் மொழிபெயர்த்தும், தமிழ்மொழியில் இருக்கின்ற சிறப்புடைய இலக்கியங்களை மேற்சொன்ன மொழிகளில் மொழிபெயர்த்தும் வழங்கினால் பரந்த இலக்கிய உலகின் விரிந்த செய்திகள் எங்கும் பரவும். தமிழ்நாட்டில் த...