இடுகைகள்

TSunami லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுனாமி – ஆழிப்பேரலை

படம்
உலகம் தோன்றிய நாள் முதலாக மனிதஇனத்திற்குக் கடலைக் காண்கிறபோதெல்லாம் மனதில் ஆனந்தமும், அச்சமும் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனந்தத்திற்கான காரணம், முதல் உயிரினம் தோன்றியது (அமீபா என்ற ஒரு செல் பிராணி) கடலில்தான். எனவே பிறந்தவீட்டைப் பார்ப்பதுபோல மனதில் ஆனந்தம். அச்சத்திற்கான காரணம் கடல் கரைகள் அற்றது. எந்தநேரமும் பொங்கி எழலாம் என்கிற எண்ணம்தான்.   ‘ நீர்  மிகின்  சிறையும்  இல்லை’   என்கிறது ஒரு சங்கப்பாட்டு. தரையில் இருக்கின்ற உயிரினங்களைப்போலவே ஆழ்கடலிலும் நுண்ணுயிர் தொடங்கி,  மீன்,  ஆமை,  கடல்பசு,  கடற்குதிரை,  கடல்பாம்பு , மற்றும் யானையைக் காட்டிலும் பெரிய உயிரினமான  திமிங்கலமும்  கடலில்தான் உள்ளன.  இக்கடலில் மீன்கள் மட்டுமல்லாமல்  முத்துக்கள்,  பவளப்பாறைகள்  போன்ற இயற்கைவளங்களும் நிறைந்து காணப்படுகின்றன. உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பாக ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கக் கண்டங்கள் ஒன்றாக இருந்து பின்னர் காலப்போக்கில் பிரிந்திருக்கலாம் என  ‘ இடம்பெயரும்  கண்டங்கள்’  என்ற நூல் குறிப்பிடுகிற...