சின்னக்கண்ணன்….பாலமுரளி கிருஷ்ணா…
இசைஉலகில் பெரும் புகழ்பெற்ற திரு.பாலமுரளி கிரு ஷ் ணா அவர்கள் திரையுலகிலும், தன் பாடல்களால் சாதனை புரிந்திருக்கிறார். திருவிளையாடல் படத்தில் திரு.டி.எஸ்.பாலையா அவர் ளுக்குப் பின்னணிக் குரல் கொடுத்து ‘ஒரு நாள் போதுமா’ என்ற பாடலை ராகமா லி கையில் மிகச்சிறப்பாகப் பாடியிருப்பார். இதேபோல, இயக்குநர் ஸ்ரீதரின் ‘கலைக்கோயில்’ படத்தில் ‘தங்க ரதம் வந்தது வீதியிலே’ என்ற பாடலும், ‘சாது மிரண்டால்’ படத்தில் ‘அருள்வாயே’ என்ற பாடலும், கே.பாலச்சந்தரின் ‘நூல் வேலி’ படத்தில் ‘மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே’ என்ற பாடலும் என்றும் மறக்க முடியாதவை. இளையராஜா இசையில், ‘கவிக்குயில்’ படத்தில் ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்ற பாடல் மூலம் பெரும்புகழைப் பெற்றவர் இவர். இதுதவிர, சுவாமி ஐயப்பன், பக்த பிரகலாதா போன்ற படங்களில் நாரதராகவும் வேடமேற்று நடித்திருப்பார். சுவாமி ஐயப்பன் படத்தில் ‘திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமந் நாராயணா’...