இடுகைகள்

ஜனவரி 5, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதிய பார்வை

படம்
                   பார்வை என்பது மனிதர்களுக்கு மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. தவிரவும், கண்ணின் பயன்பாடு கல்விக்கான வழி எனவும் காலங்காலமாகக் கூறப்பட்டு வருகின்றது. ஆயினும் பார்வையற்ற மனிதர்கள் இவ்வுலகத்தில் வாழமுடியாதா என்றால் முடியும். இன்னும் சொல்வதாக இருந்தால் ஐம்புலன்களில் ஏதேனும் ஒரு புலன் குறைவாக உள்ளவர்கள் கூட எத்தனையோ சாதனைகள் படைத்திருப்பதை நாம் வரலாற்றில் காண்கிறோம்.                மிகப்பெரிய சாதனைகளைச் செய்த ஹெலன் ஹெல்லர், ஒன்றரை வயதுக் குழந்தையாக இருந்தபோது மிகக் கொடுமையான விஷஜுரத்தால் தாக்கப்பட்டு பார்க்கவும், கேட்கவும், பேசவும் முடியாத நிலைக்கு ஆளானார். பெண்குழந்தையாக இருந்தபோதும்; இடைவிடாத முயற்சியின் காரணமாக எழுத்தாளராக, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பவராகப் பல சாதனைகளைப் புரிந்துள்ளார்.    ஒருமுறை திண்டுக்கல்லுக்கு அருகேயுள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் ரோட்டரி சங்கத்தின் சார்பாக ஒரு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு சிறப்ப...

கிராமியப் பொருளாதாரம் நாட்டின் எதிர்காலம் – ஜே.சி. குமரப்பா

படம்
  இந்தியப் பொருளாதாரம் கிராமங்களைச் சார்ந்ததே என்பது அறிஞர்களின் கருத்து.   சர்தார் வல்லபாய் பட்டேல்   அவர்களிடத்தில் ஒரு ஆங்கிலேயர் , ‘வாட் இஸ் யுவர் கல்ச்சர்?’  என்று   கேட்டபோது, அவர் சட்டென்று,   ‘ அக்ரிகல்ச்சர் இஸ் அவர் கல்ச்சர்’ என்று பெருமையோடு கூறினாராம். காந்தியடிகளின்,  கிராமப்பொருளாதாரக் கொள்கைகளின் தளபதி என்று அழைக்கப்பட்டவர் திரு.ஜே.சி. குமரப்பா அவர்கள் .  அவர் தமிழகத்திலே பிறந்து அமெரிக்காவிலே பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருந்தபோதும், இந்திய மண்ணையும், சுற்றுப்புறச் சூழலையும், மனிதர்களையும் பெரிதும் நேசித்தார்.  இன்னும் சொல்லப்போனால் அவர் அன்றே இரசாயன உரங்களைத் தவிர்க்க வேண்டும், இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும் எனக் குரல் எழுப்பினார். வளம்மிகுந்த நம் மண்ணுக்கு இயற்கை உரங்களே தாய்ப்பால் போல வலிமை தரும் என்றார். அதை வலியுறுத்தும் விதமாக, ஒருமுறை பார்லிமெண்டுக்கு மாட்டுவண்டியில் வந்தாராம் ஜே.சி. குமரப்பா. அப்போது அவரைப் பார்த்துச் சிரித்த அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் சிரித்துக்கொண்டே   ‘நிலங்களை டிராக்டர்கள் கொ...