இடுகைகள்

ஜனவரி 17, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கிராமத்து மனிதர்கள்

படம்
                               எங்கள் கிராமத்தில் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாகவே, இந்த வீரம்மாவைப் பார்த்திருக்கிறேன்.  ‘ விளக்குமாற்று  வீரம்மாள்’  என்ற பெயர் சுற்றுப்பட்டிகளில்கூடப் பிரபலம். அநேகமாக இவள் பிறவியிலேயே விதவை என்பது ஒரு சாரார் கருத்து. பெரும்பாலும் சடையாகவும் இல்லாமல், மொட்டையாகவும் இல்லாமல் ஒரு மாதிரியாகத் தொங்கும் முடி. அதைப் பார்த்தாலே ‘சடாமுடி’ நினைவிற்கு வரும். ஐம்பது வயதைத் தாண்டிய உடம்பு. தான் எதையும் சட்டை செய்யாதவள் என்பதைக் காட்டுவதுபோலச் சட்டையே போடாத உடம்பு. சேலையைக் கட்டி அதனையும் இடுப்பில் இழுத்துச் சொருகி, ஆடுகால் தசை ‘தடங் தடங்’ என்று அதிர, வலது கையில் விளக்குமாற்றையும், இடதுகையில் வாளியும் பிடித்துச் சிலர் வீட்டு வாசலைப் பெருக்குபவள்.                பெரும்பாலும் காலையில் மட்டுமே காட்சி தருபவள். ஒருநாள் காலையில் பார்க்காவிட்டால் இனி அடுத்த நாள் காலையில்தான் ப...

வீரத்திற்கும்… ஞானத்திற்குமான நாள்… (மாட்டுப்பொங்கல்… திருவள்ளுவர் தினம்)

படம்
               தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கலாகவும், திருவள்ளுவர் தினமாகவும் நாம் இந்த நாட்களைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றோம். முதலில் மாடுகளுக்கு நன்றி செலுத்தவேண்டிய அவசியம் என்னவென்றால் மனிதர்களோடு குடும்பத்தில் ஒரு நபராக இருப்பது கிராமங்களில் இன்றைக்கும் மாடுகள்தான்.                இந்த மாடுகள், காளைமாடுகளாக இருந்தால், அவை நிலம் உழுக உழவுக்கும், நீர் இறைக்க சாலுக்கும், பயணம் செய்ய வண்டிகளை இழுக்கவும் எனப் பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதஇனக்குழு வேளாண்மைச் சமுதாயத்தைத் தொடங்கிய காலத்திலிருந்து உடனிருப்பவை.                இதேபோல பசுக்கள், வீட்டின் பொருளாதாரத்திற்கு அடிப்படை. நாம் பசுக்களுக்கு என்ன கொடுக்கிறோம்? பதிலுக்கு பசுக்கள் நமக்கு என்ன கொடுக்கின்றன? என்பதைச் சற்றே எண்ணிப்பாருங்கள் நிலத்தை அறுவடை செய்கிறோம். நெல்மணிகளை நாம் எடுத்துக்கொண்டு கழிவுப்பொருளாகிய வைக்கோலை மாட்டுக...

திரையுலகில் நகைச்சுவை நடிகர்கள்

படம்
        இந்தியத் திரைப்பட வரலாற்றில் தமிழ்த் திரையுலகிற்கு ஒரு தனியிடம் உண்டு. அமெரிக்காவில்  ஹாலிவுட் , பம்பாயில்  பாலிவுட்,  தமிழ்நாட்டில் கோடம்பாக்கத்தை  கோலிவுட்  என்று வேடிக்கையாகப் பத்திரிக்கையாளர்கள் குறிப்பிடுவது உண்டு.                1931இல் தமிழ் சினிமா பேசவும், பாடவும் தொடங்கியது. அன்றையிலிருந்து இன்றைக்கு வரைக்கும் இத்திரையுலகில் புகழும், பணமும், பதவியும் பெற்று உயர்ந்தோர் பலர். அதைப்போலத் தங்கள் நடிப்பால் இசையால், கவிதைகளால் தமிழ்த்திரைக்குப் பெரும்புகழை உலக அரங்கில் எடுத்துச் சொல்லுமளவிற்குப் பெருமை சேர்த்தவர்களும் உண்டு.                இத்தகு புகழ்மிக்க தமிழ்த் திரைப்பட உலகில் காலம்காலமாகத் தங்களது நகைச்சுவை நடிப்பால் வாழ்ந்த காலத்திலும், மறைந்தபோதிலும் மக்களை மகிழ்வித்து, தற்போதும் மகிழ்வித்துக் கொண்டிருக்கின்ற நகைச்சுவை நடிகர்கள் ஒரு தனியிடத்தைப் பெறுகிறார்கள்.    திரு.  கா...