இடுகைகள்

gnansambandan blog லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆடிப்பட்டம் தேடி விதை…

படம்
  நம் பண்டையத் தமிழர்கள் பன்னிரெண்டு மாதங்களை ஆறு பருவங்களாகப் பிரித்து வைத்திருந்தார்கள். இதற்குப் பெரும்பொழுது என்று பெயர். அந்த ஆறு பருவங்கள் எவை என்றால்,  1. சித்திரை, வைகாசி - இளவேனில் 2. ஆனி, ஆடி - முதுவேனில் 3. ஆவணி, புரட்டாசி  - கார்காலம் 4. ஐப்பசி, கார்த்திகை - கூதிர்காலம் 5. மார்கழி, தை - முன்பனிக்காலம் 6. மாசி, பங்குனி - பின்பனிக்காலம் என்பவையாகும். முதுவேனிற் காலமாகிய இந்த ஆடிமாதத்தில்தான் சூரியன் தெற்குநோக்கி நகர்கின்ற தட்சிணாயணக் காலம் வருகின்றது. இதே சூரியன் தை மாதம் தொடங்கும்போது வடக்குநோக்கி நகர்வதால் அது உத்திராயணக் காலம் என அழைக்கப்படுகிறது.  ஆடி மாதத்தைப் பொறுத்தவரை பல்வேறு சிறப்புகள் இம்மாதத்திற்கு உண்டு. மழைக்குரிய பருவகாலம் தொடங்கவிருப்பதால் ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பது விவசாயிகளின் பேச்சு வழக்கு. இந்த ஆடிமாதத்தில் காற்று தொடர்ந்து வீசுவதால் ‘ஆடிக்காத்துல அம்மியும் பறக்கும்’ என்பது கிராமத்துப் பழமொழி.  வேளாண்மை தொடங்குகின்ற காலமாதலால் பணப்புழக்கம் குறைவாக இருக்கும், விவசாய வேலைகள் தொடங்கி இருக்கும். இதனால்தானோ ...

தமிழில். . . அறிவியல். . .

படம்
உலகிலுள்ள மொழிகளைப் பற்றி மொழிநூல் அறிஞர்கள் கூறும்பொழுது,  ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்தன்மை உண்டு எனக் குறிப்பிடுவர். ஆங்கிலமொழியை  ‘அரசாங்க மொழி’  என்றும், பிரெஞ்ச் மொழியை  ‘இசைமொழி’  என்றும், உருதுமொழியைக்  ‘கவிதைமொழி ’ என்றும் கூறுவது வழக்கம். அதுபோல இந்தியமொழிகளில் வங்கமொழியைக்  கவிதைமொழி  என்று கூறும்போது, பழைமைச் சிறப்பும் புதுமைப்பொலிவோடும் விளங்குகின்ற தமிழ்மொழியை  பக்திமொழி  என்று குறிப்பிடுவர். அதனால்தான் ஜி.யு.போப் என்ற மேல்நாட்டு அறிஞர் திருவாசகத்தை மொழிபெயர்த்து அதனுடைய பக்திஉணர்வில் ஈடுபட்டுத் தன்னை ஒரு  ‘தமிழ் மாணவன்’ என்று அறிவிக்குமாறு வேண்டினார். இரண்டாயிரம் ஆண்டுப் பழைமையுடைய தமிழ் இலக்கிய வரலாற்றில்  7ஆம் நூற்றாண்டு தொடங்கி 18ஆம் நூற்றாண்டுவரை நமக்குக் கிடைத்திருக்கிற இலக்கியங்களில்,  தேவாரம், திருவாசகம், நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்  போன்ற பக்தி இலக்கியங்களே மிகுதியும் இடம் பெறுகின்றன. இத்தகைய  தமிழ்மொழியில் அறிவியல் செய்திகள்  எனப் பார்க்கும்போது தனியாக அறிவியலுக்கென ஒரு பகுதியைப் பற்றி...

காட்டில் அதிசயங்கள்

படம்
உலக அதிசயங்கள் எத்தனை என்று கேட்டால் உடனே  ‘எட்டு’   என்று  சொல்லி அவற்றை  தாஜ்மஹால், பைசா நகரத்துச் சாய்ந்த கோபுரம்  என்று  வரிசைப்படுத்திக் கூறத் தொடங்குவோம். இவை தவிர நம்நாட்டிலே,  ஊருக்குள்ளே நம்மைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளில் காணப்படுகின்ற  அதிசயங்களை நாம் எண்ணிப் பார்த்ததுண்டா? பிலோ இருதயநாத்  என்கின்ற ஓர் எழுத்தாளரை அந்தக் காலத்து  வாசிப்பாளர்கள் அறிந்திருப்பார்கள். அஞ்சல் அலுவலகத்தில் வேலை பார்த்த இவர், தன் சொந்தச் செலவில் சுயமுயற்சியால் தமிழகத்தின் மலைப்பகுதிகளில் காடுகளில் வாழ்ந்த பழங்குடி மக்களுடைய பழக்கவழக்கங்களை, நம்பிக்கைகளை அங்கேயே சென்று அவர்களோடு தங்கி அதனை கலைமகள், மஞ்சரி, கலைக்கதிர் போன்ற பத்திரிக்கைகளில் எழுதி பதிவு செய்தார். சுற்றுப்புறச் சூழல், மானுடவியல் என்று, இன்று பலதுறைகள் வளர்ந்திருந்தாலும் தம் எழுத்தில் இவற்றைத் தொடங்கி வைத்தவர்  பிலோ  இருதயநாத்  எனச் சொல்லலாம். பயண வசதிகள் ஏதுமில்லாத அந்தக் காலத்தில் சுமையேற்றி வரும் லாரிகளில், மாட்டு வண்டிகளில், மட்டக் குதிரைகளில் பயணம்செய்து சில நேரங்கள...