இடுகைகள்

மார்ச் 14, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்தோனேசியா சோழர் கோவில்…

படம்
            இந்தோனேசியாவில் முதல்நாள் கூட்டத்தை முடித்துக் கொண்டு நானும் என் துணைவியாரும் நாங்கள் தங்கியிருந்த 60மாடிகள் கொண்ட பிரம்மாண்டமான ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தபோது இரவு மணி 12. ஆனால், அந்நகரமோ நமது மதுரையைப் போலவே தூங்கா நகரமாகச் சுறுசுறுப்பாக அந்த நேரத்திலும் இயங்கிக் கொண்டிருந்தது.                ‘காலை 7மணிக்கு விமானம். நாம் 6 மணிக்கு அங்கே இருக்க வேண்டும். 5மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு விடலாம். நான்கு மணிக்கு எழுந்து தயாராகி விடுங்கள்’ என்று சொல்லிவிட்டுத் தமிழ்ச்சங்கத் தலைவர் விசாகன் சென்றபோது, நாங்கள் திகைத்துப் போனோம். நாங்கள் தங்கியிருந்த அறை 50வது மாடியில் இருந்தது. அங்கிருந்து அந்த நகரத்தைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது.                மிகப்பெரிய சாலைகளில் மல்லிகைப் பூ போன்றும், கனகாம்பரப் பூ போன்றும் கார்கள் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருந்தன. ஆமாம்! வந்துகொண்டிருக்கும் கார்களின் முன்வி...