இடுகைகள்

தாடிக்கொம்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தாடிக்கொம்பு சிற்பங்கள்

படம்
  தமிழகத்தின் பழம் பெருமைகளில் ஒன்று சிற்பக்கலை. தற்காலத்தில்கூட இயல், இசை, நாடகம் என்றிருந்த முத்தமிழை அறிவியல், நுண்கலை என ஐந்தமிழாகவும், மிகச் சமீப காலத்தில் கணினித் தமிழ் என்ற ஒன்றையும் இணைத்து, தமிழை ஆறு பகுப்புகளாகச் சொல்லி வருகிறார்கள். தமிழகத்தில் இத்தனைக் கோயில்கள் தேவையா எனச் சிலர் கேட்கிறார்கள். கோவிலென்பது வெறும் வழிபாட்டுத் தலம் என்று மட்டும் நினைக்கலாகாது. அக்காலங்களில் தனியாக மருத்துவமனைகள் இல்லாததால் கோவில் நந்தவனங்களில் மலர்கள், மூலிகைகள், பச்சிலைகள் முதலானவற்றைத் தரும் செடிகளைப் பயிரிட்டு அவற்றின் மூலம் மருந்துகளைத் தயாரித்து நோயுற்று நலிந்து வந்தவர்களுக்கு அரசனின் ஆணைப்படி தந்துதவியிருக்கிறார்கள். இதற்கு  ‘ ஆதூர  சாலை’  என்று பெயர். அடுத்தபடியாக உடல் குறையுற்றோர், முதியோர், வறியவர்கள் ஆகியோர்க்கு உணவைத் தானமாகக் கொடுக்கின்ற அன்னசத்திரமாகவும் கோவில்கள் விளங்கியிருக்கின்றன. மூன்றாவதாக இசை, ஓவியம், நாட்டியம், நாடகம், சிற்பம், பண்ணிசை எனப் பல்வகையான கலைகள் சிறந்து விளங்கும் இடங்களாகவும் கோவில்கள் அமைந்திருக்கின்றன. நான்காவதாக மனிதர்களை ஒழுக்க நெறியில் ...