இடுகைகள்

நா.பார்த்தசாரதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இதழியல் உலகின் தீபம் (நா. பார்த்தசாரதி)

படம்
தமிழக எழுத்தாளர்களுள் தனக்கென ஒரு மொழிநடையையும், இலக்கையும் தீர்மானித்துக்கொண்டு எழுதிய எழுத்தாளப் பெருமக்களுள் ஒருவர்   ‘ தீபம்’  நா. பார்த்தசாரதி   அவர்கள். நான் கல்லூரியில் இளங்கலை தமிழ் படித்த காலத்தில் (1977) எங்களுக்குப்  ‘ பிறந்த  மண்’  என்கின்ற ஒரு குறுநாவல் பாடமாக வைக்கப்பட்டிருந்தது. அதன்  ஆசிரியர்  நா. பார்த்தசாரதி  அவர்கள். அதில் அவர் சொல்லியிருந்த செய்தியானது இன்றைக்கு வரைக்குமான இளைய சமுதாயத்திற்கான செய்தியாக நாம் எடுத்துக்கொள்ளலாம். அந்தக் கதையில் வருகின்ற கதாநாயகன் வறுமையின் காரணமாகத் தன் குடும்பத்தைக் காப்பாற்ற அயல்நாடு சென்று அங்கு பல அவமானங்களைச் சந்தித்தபின், தன் சொந்தஊருக்கே திரும்பிவந்து, தண்ணீர் இல்லாததால்தான் ஊரில் விவசாயம் செய்ய முடியவில்லை என்பதை உணர்ந்து, ஊராரோடு சேர்ந்து ஒரு வாய்க்காலை உருவாக்கி அதன் மூலம் விவசாயம் செய்து உயர்வதாக அந்தக் கதை அமைந்திருக்கும்.                ‘என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்       ...