இடுகைகள்

தில்லையாடி வள்ளியம்மை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆப்பிரிக்க நாட்டில் உயிர்நீத்த அதிசயச் சிறுமி…

படம்
ஆங்கிலேயர்கள் துப்பாக்கியை உன்னை நோக்கி குறிவைத்தபோது உனக்குப் பயம் ஏற்படவில்லையா?’ என்று அவர் கேட்க, அதற்கு அந்தப் பதினைந்து வயதுச் சிறுமி, ‘இல்லை, பயம் இல்லை, அவன் சுட்டாலும் என் உயிர் நாட்டுக்காகத்தான் போகப்போகிறது அதை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன்’ என்று நோயுற்று மரணத்தருவாயில் இருந்த அவள் சொன்னாள். என் தேசம் விரைவில் சுதந்திரம் அடையும் என்று மகிழ்ந்தார் அந்தப் பெரியவர். இவ்வாறு அந்தச் சிறுமியிடம் பேசியவர்தான்  மோகன்தாஸ்  கரம்சந்த்  காந்தி.   அவருக்குப் பெருமையோடும் உரிமையோடும் பதிலளித்த அந்தச் சிறுமிதான் தமிழகத்தின் கடற்கரை நகரமான தில்லையாடி பகுதியைச் சார்ந்த  வள்ளியம்மை. ஆம், தில்லையாடி வள்ளியம்மையின் மரணத்தருவாயில் காந்தியடிகளோடு பேசுகிற வாய்ப்பையும் அந்தச் சிறுமிக்காகத் தேசப்பிதா கண்கலங்கியதும் தென்னாப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பெர்க் நகரில்தான் நடந்தவை. இந்த உரையாடலுக்குப்பின் அந்தச் சிறுமி சிலநாட்களில் மரணமடைந்து விட்டார். இந்நிகழ்ச்சி நடந்த ஆண்டு 1914. அதன்பின்னர் 33ஆண்டுகள் கழித்துதான் 1947இல் நாம் சுதந்திரம் பெற்றோம். தமிழக மண்ணில் பூலித்தேவன் தொடங்க...