தமிழகத்தின் முதல் விடுதலைப்பெண் குரல்… வேலு நாச்சியார்
ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தியபோது நமக்குள் இருந்த ஒற்றுமையைக் குலைப்பதற்காகப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு நம்மை அவர்கள் வீழ்த்தினர். அதனால்தான் பிற்காலத்தில் மகாகவி பாரதியார்கூட, ‘ ஆயிரம் உண்டிங்கு ஜாதி – எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி ? – ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர் , தம்முள் சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ ’ என்று நம் நிலை குறித்துப் பாடியுள்ளார். இந்தியாவிலேயே விடுதலைக்கான முதல் வீரக்குரல் நெற்கட்டான் செவ்வலை ஆண்ட பூலித்தேவனுடைய குரல் என்றால், அதேபோல அதற்குப்பின் வந்த தென்னரசியாம் வீரமங்கை வேலுநாச்சியும் வீரக்குரல் எழுப்பினார். ஆங்கிலேயரை எதிர்த்து இழந்த தன்னுடைய சிவகங்கை பகுதியை மீட்டு அரசியானார். தன் கணவரான முத்து வடுகநாதரைக் காளையார்கோவிலில் சூழ்ச்சி செய்து ஆங்கிலேயர்கள் கொன்றதை அறிந்து, அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடும், இழந்த தன் நாட்டைமீ...