இடுகைகள்

G.Gnanasambandan லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழகத்தின் முதல் விடுதலைப்பெண் குரல்… வேலு நாச்சியார்

படம்
ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தியபோது நமக்குள் இருந்த ஒற்றுமையைக் குலைப்பதற்காகப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு நம்மை அவர்கள் வீழ்த்தினர். அதனால்தான் பிற்காலத்தில் மகாகவி பாரதியார்கூட,  ‘ ஆயிரம்   உண்டிங்கு   ஜாதி  –  எனில்   அந்நியர்   வந்து   புகல்   என்ன   நீதி ? –  ஓர்   தாயின்   வயிற்றில்   பிறந்தோர் ,  தம்முள்   சண்டைசெய்   தாலும்   சகோதரர்   அன்றோ ’ என்று நம் நிலை குறித்துப் பாடியுள்ளார். இந்தியாவிலேயே விடுதலைக்கான முதல் வீரக்குரல்  நெற்கட்டான் செவ்வலை  ஆண்ட  பூலித்தேவனுடைய  குரல்  என்றால், அதேபோல அதற்குப்பின் வந்த  தென்னரசியாம்  வீரமங்கை  வேலுநாச்சியும்  வீரக்குரல்  எழுப்பினார்.  ஆங்கிலேயரை எதிர்த்து இழந்த தன்னுடைய சிவகங்கை பகுதியை மீட்டு அரசியானார். தன் கணவரான  முத்து  வடுகநாதரைக்  காளையார்கோவிலில் சூழ்ச்சி செய்து ஆங்கிலேயர்கள் கொன்றதை அறிந்து, அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடும், இழந்த தன் நாட்டைமீ...

எட்டாவது வள்ளல்… எம்.ஜி.ஆர்…

படம்
சில ஆண்டுகளுக்கு முன்பாக நான் இலங்கை சென்றிருந்தபோது   ‘ கண்டி’   என்ற ஊருக்கு அருகில் காரில் சென்று கொண்டிருந்தேன். திடீரென்று அந்த ஓட்டுநர், ‘ஐயா அந்தப் பக்கம் கையெடுத்துக் கும்பிட்டுக்கோங்க’ என்று நெகிழ்வாகக் கூறினார். நானும் கையெடுத்து வணங்கிவிட்டு, ‘அருகில் ஏதேனும் கோவில் இருக்கிறதா?’ என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், ‘இந்த ஊருக்கு அருகில்தான்   புரட்சித்தலைவர்  மக்கள்  திலகம்  திரு. எம். ஜி. ஆர்   அவர்கள் பிறந்த வீடு இருக்கிறது’ என்று சொன்னவுடன் நான் வியந்து போனேன். ஆம்,  மருதூர்  கோபால  மேனன்  ராமச்சந்திரன்  என்று அழைக்கப்படுகின்ற திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் தந்தை கேரளாவிலிருந்து குடும்பத்தோடு இலங்கைக்கு வேலை தேடிச்சென்றபோது அங்குதான் எம்.ஜி.ஆர் பிறந்திருக்கிறார். பின்னர் தந்தையாருடைய மறைவுக்குப் பிறகு, எம்.ஜி.ஆரையும், அவரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியையும் கூட்டிக்கொண்டு தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு வந்தார் எம்.ஜி.ஆரின் தாயாராகிய  சத்யபாமா  அம்மையார். அங்கு மூன்றாம் வகுப்புவரை எம்.ஜி.ஆரும் அவருடைய சகோத...

திரைவானில் ஒரு சந்திரன்… கே.பாலச்சந்தர்

படம்
தமிழ்த் திரையுலகில் புதிய மாற்றங்களை உருவாக்கிய இயக்குநர் வரிசையில்   டைரக்டர் ஸ்ரீதர்   அவர்களுக்கு எத்தனை பங்குண்டோ அத்தனை பங்கு   இயக்குநர் சிகரம் திரு.கே.பாலச்சந்தர்   அவர்களுக்கும் அவரைத் தொடர்ந்து வந்த   இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கும்   உண்டு. திரு.கே.பாலச்சந்தர் அவர்கள் அரசுப்பணியாளராக வாழ்க்கையைத் தொடங்கியபோதும் அவரிடத்தில் இருந்த நாடகத் தாகம் அவரை நாடக உலகிற்கும் திரையுலகிற்கும் அழைத்து வந்தது. சென்னை ஏ.ஜி. அலுவலகத்தில் (அக்கவுண்டண்ட் ஜெனரல்) பணிபுரிந்தபோது உணவு இடைவேளை நேரத்தில் நாடகத்திற்கான கருவை உருவாக்கி நடிக்க விருப்பமுள்ளவர்களைத் தன் குழுவில் இணைத்துக்கொண்டு ஆங்கில நாடகங்களை, மேடை நாடகங்களாக இயக்கிக்கொண்டிருந்தார் பாலச்சந்தர். அவரது ஆற்றலைக் கேள்விப்பட்ட திரையுலகைச் சார்ந்த திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் அவரது தயாரிப்பு நிறுவனத்தில் பாலச்சந்தரை இணைத்துக்கொண்டு  எம். ஜி. ஆர்  அவர்கள்  கதாநாயகனாக நடித்த  ‘ தெய்வத்தாய்’  படத்திற்குக் கதை வசனம் எழுத வாய்ப்புக் கொடுத்தார். அந்தப் படம் வெற்றிபெற்ற போதிலும் அதற்குப் பிறகு...