இடுகைகள்

Ulaganayagan லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தசாவதானி… கமல்…

படம்
“மூன்றாம் பிறை”   படம் முடிந்து நண்பர்களோடு வெளியே வந்தபோது,  ‘கமலஹாசன்’  போன்ற அற்புதமான கலைஞர்கள் வாழுகின்ற காலத்தில் நாமும் வாழ்கின்றோம் என்பதை எண்ணும்போது பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறதென்று நான் என் நண்பர்களிடத்திலே சொன்னேன். அவர்களும் ‘ஆமாம்’ என்று உற்சாகமாக என் கருத்தை ஆமோதித்து வரவேற்றார்கள். அப்போது நான் மதுரை  தியாகராசர் கல்லூரியில்  எம்.ஏ., படித்துக்  கொண்டிருந்தேன் (1982). குழந்தை நட்சத்திரமாக ‘ களத்தூர் கண்ணம்மாவில் ’ அறிமுகமாகிப் ‘ பாதக்காணிக்கை’ ‘பார்த்தால் பசி தீரும்’ ‘வானம்பாடி’ ‘ஆனந்தஜோதி’  எனப் பல்வேறு படங்களில் துறுதுறுப்பான சிறுவனாகக் காண்போர் இதயத்தை ஈர்த்தவர்  குழந்தை நட்சத்திரமான கமல்ஹாசன்.  எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினிகணேசன், சந்திரபாபு, தங்கவேலு  என்று பல்வேறு கலைஞர்களோடு இணைந்து நடிக்கும் அரியவாய்ப்பு அவருக்கு அப்போதே கிடைத்திருந்தது. சிறுவயதில் டூரிங் டாக்கீஸ்களில் மணல் தரையில் மல்லாந்து படுத்துக்கொண்டு  ‘பாதாள பைரவி’  படத்து  ரங்காராவையும், ‘மதுரை வீரன்’எம்.ஜி.ஆரை யும் பார்த்து, பயந்...