இடுகைகள்

திருவெம்பாவை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இரு பாவைகள்… ஓர் பார்வை…

படம்
  ‘ பாவை’   என்ற சொல், பழமையை, பெண்களை, பார்வை ஒளியைக் குறிக்கும் சொல்லாகும். பாவை விளக்குகளைக் கோயில் சிற்பங்களில் காண்கிறோம். ‘ என்  கண்ணின்  பாவையன்றோ’  என பாரதி பாடல் அமைகிறது.  ‘ பாவை  நோன்பு’  என்பது தமிழகத்தில் பெண்களுக்கேயுரிய பழமையான வழிபாட்டு முறை. சங்க இலக்கியங்களில், பரிபாடலில்  ‘ பாவை  வழிபாடு’  பற்றிய செய்தி கூறப்படுகிறது. தைப்பாவை என்று கண்ணதாசன் தை மாதத்தைப் பெண்ணாகப் பாவித்துப் பாடியுள்ளார். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவராகிய 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள், மார்கழி மாதத்தில் பெண்கள் பாவை நோன்பு நோற்க வேண்டிய அவசியத்தை 30 பாடல்களில் பாடி, அதற்குத்  ‘ திருப்பாவை’  எனப் பெயரிட்டுள்ளார். வைணவ மதத்தின் கடவுளான திருமாலை அடைவதற்கு இப்பாவை நோன்பு கன்னியர்க்குப் பயன்படும் என்பது ஆண்டாளின் கருத்து. இதேபோன்று சைவசமயக் குரவர்களில் ஒருவராகிய மாணிக்கவாசகர் தன்னைப் பெண்ணாகப் பாவித்து, சிவபெருமானை அடைவதற்குப் பெண்கள் பாவை நோன்பு இருக்கவேண்டும் என 20பாடல்கள் பாடி அதற்குத்  ‘ திருவெம்பாவை’  எனப் பெயரிட்டார். பத்...