இடுகைகள்

கவிஞர் வாலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நான்கு தலைமுறைக் கவிஞர்…

படம்
கவிஞர் வாலி அவர்கள் புகழ்மிக்க திரைப்படப் பாடலாசிரியர். இவர் கவிஞராக மட்டுமல்லாமல் திரைப்பட வசனகர்த்தாவாகவும், நடிகராகவும்  புதுக்கவிதையில் காவியங்களைப் படைப்பவராகவும் (அவதார புருஷன், கிருஷ்ணவிஜயம், பாண்டவர் பூமி) திகழ்ந்தார். இவர் 1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம்தேதி திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் பிறந்தார்இவரின் இயற்பெயர்  டி.எஸ். ரங்கராஜன். ஆனந்த விகடன் இதழில் வாலி, தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய ‘நினைவு நாடாக்கள்’ என்ற தொடரும், ‘புதிய பார்வை’ இதழில் ‘நானும் இந்த  நூற்றாண்டும்’ என்ற தொடரும் இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தன.  கவிஞர் வாலி அவர்கள் 15,000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை  எழுதியுள்ளார். இவைதவிர, ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே  உனை மறவேன்’ எனும் இவரது தொடக்கக் காலப்பாடல் இவரது முருகபக்தியை  உலகத்திற்கு அறிவித்தது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் போன்றோரை அடுத்து அதிகப் பாடல்களை எழுதியவர் இவரே.இத்தகைய பெருமைமிகுந்த கவிஞரைப் பாராட்டுகிற வாய்ப்பு எனக்கும் கிடைத...