இடுகைகள்

பிப்ரவரி 17, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்வேந்தர்…துணைவேந்தர்… வ.அய்.சுப்பிரமணியம்

படம்
தஞ்சை மண்ணின் புகழுக்கு நஞ்சை வயல்கள் மட்டும் காரணமல்ல, கொஞ்சு தமிழும்தான் காரணமாக இருக்கவேண்டுமென்று அன்றைய  தமிழக  முதல்வர்  புரட்சித்தலைவர்  எம். ஜி. ஆர்.  அவர்கள் தமிழுக்கென ஒரு பல்கலைக்கழகத்தை 1981ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கி வைத்தார். கரந்தைத்தமிழ்ச்சங்கத்தைஉருவாக்கிய   உமாமகேஸ்வரனார்,   வேங்கடசாமி நாட்டார்  போன்றோர்களின் கனவு தமிழுக்கெனத் தனிப்பல்கலைக்கழகம் அமையவேண்டும் என்பது. அக்கனவு நனவானது. இத்தகைய பெருமைமிகுந்த பல்கலைக்கழகத்திற்குத் தகுதியும், தமிழாய்ந்த பெருமகனுமாகிய ஒருவர்தான் துணைவேந்தராய் நியமிக்கப்படவேண்டுமென்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் நினைத்தார். இத்தமிழ்ப் பல்லைக்கழகம் தொடங்கப்பட்டபோது புதிய வளாகத்தில் தொடங்கப்படவில்லை. சரபோஜி மன்னர்களின் அரண்மனையின் ஒரு பகுதியில்தான் பல்கலைக்கழகமும், நூலுகக் கட்டிடங்களும் இயங்கத் தொடங்கின. பல்கலைக்கழகம் கட்டுவதற்கு எவ்வளவு இடம் வேண்டுமென எம்.ஜி.ஆர் அவர்கள் அதிகாரிகளை அழைத்துக் கேட்டபோது அவர்கள் நூறு ஏக்கர் இடம் வேண்டும் என்று கேட்டதாகவும், எம்.ஜி.ஆர் அவர்கள...