நகைச்சுவை என்னும் சாவி…
திரையுலகில் புதுமுகங்களை அறிமுகம் செய்த இயக்குநர்கள் என்று பார்க்கும்போது இயக்குநர் ஸ்ரீதர், கே. பாலச்சந்தர், பாரதிராஜா, இவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இதுபோல எழுத்துலகில் புதியவர்களைத், தான் பணியாற்றிய பத்திரிக்கையில் அறிமுகப்படுத்தியதோடு அவர்களுக்குப் பெரும் புகழையும்வாங்கித்தந்தவர் எழுத்தாளர் பத்திரிக்கையாளர் சா. விசுவநாதன் என்ற சாவி அவர்கள்தான். நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவர்களான கல்கி, புதுமைப்பித்தன், தேவன் இவர்களையடுத்துச் சாவி அவர்களையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். இவரது மேடைப்பேச்சும் மிகுந்த நகைச்சுவையாய் இருக்கும். புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர், சரோஜாதேவி அவர்கள் நடித்து ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த ‘ அன்பே வா’ படம் நூறுநாட்கள் ஓடி வெற்றிகண்டது. அந்தப் படத்தினுடைய வெற்றிவிழாவில் திரு.சாவி அவர்கள் பேசும்போது, ‘இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்குக் காரணம் இந்தப் படத்தைத் தயாரித்த ஏ.வி.எம்.நிறுவனம்தான் என்று நினைப்பீர்கள். இல்லை’ என்றவுடன் மேடையில் இர...