இடுகைகள்

gnanasambandan லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாடகமே உலகம்….

படம்
நாம் மக்களுக்காகத்தானே நடிக்கிறோம், நாம் நாடகத்தில் திரையில் சொல்லுகின்ற செய்திகளைப் பலர் பின்பற்றுவதில்லையே, என்ன செய்வது? “இது பல கலைஞர்கள் சொல்லும் குற்றச்சாட்டு”.                நாடகக் கலைஞர்களும்கூட இப்படிச் சொல்கிறார்கள். இருந்தாலும் பார்வையாளர்களுடைய ரசனையை எடைபோட நாடகக் கலைஞர்கள் பயிற்சி எடுத்திருக்க வேண்டும். நல்ல விஷயங்களாக இருந்தாலும் அதை கொடுக்க வேண்டிய முறையில் கொடுத்தால்தான் ரசிகர்கள் ரசிப்பார்கள். தமிழ்நாட்டில் அந்தக்காலத்தில் (திரைப்படங்கள் அதிகம் தயாரிக்கப்படுவதற்கு முன்பாக, மேடை நாடகங்கள் மூலம் சாதனை செய்தவர்களைப் பற்றி சற்றே சிந்திப்போம்)                புராண நாடகங்கள் மூலம் புகழடைந்த  ஆர். எஸ். மனோகர்  செய்த சாதனைக்கு ஈடேது. மதுரையில்  நவாப்  ராஜ  மாணிக்கம்  பிரம்மாண்டமான அரங்க அமைப்பு மூலம் தனது நாடகங்களைப் பார்க்க வைத்தாரே! அவர் நாடகத்தில் ஐயப்பன் கோவில் என்றால் பிரமாதமாக ‘செட்’ போட்டுவ...

கந்தசஷ்டியும்… சூர சம்ஹாரமும்…

படம்
தமிழ்க்கடவுளாகிய முருகன் சங்கஇலக்கியங்களில் பெரிதும் போற்றப்படுகின்ற பழைமையான கடவுள். சங்கஇலக்கியமாகிய   பத்துப்பாட்டில்  முதலாவதாக உள்ள   நக்கீரர்   பாடிய   திருமுருகாற்றுப்படை  முருகப்பெருமானுடைய ஆறுபடை வீடுகளினுடைய பெருமையைக் கூறுகின்ற நெடும்பாட்டு. இதேபோல,   எட்டுத்தொகை   நூல்களுள்   பரிபாடலிலும்  முருகப்பெருமான் பெருமை எடுத்துரைக்கப்படுகின்றது. இம்முருகப்பெருமான் வேலினை உடைய வீரனாக, பாலமுருகன், வீரமுருகன், ஞானமுருகன் என்று அனைவராலும் போற்றி வணங்கப்படுகின்றார். ஐப்பசி மாதத்தில் அமாவாசை அடுத்த வளர்பிறை நாளில் முருகனைவேண்டிப் பக்தர்கள் விரதம் இருக்கின்றனர். இது  ‘ ச ஷ் டி’  என்று அழைக்கப்படுகின்றது. குறிப்பாகக் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இந்த விரதத்தைக் கடைபிடிப்பார்கள். ‘சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்’- இது பழமொழி. இந்தப் பழமொழியினுடைய பொருள் சமைக்கின்ற மண்சட்டிகளில் உணவோ, காய்கறிகளோ இருந்தால்தான் அது அகப்பையாகிய கரண்டியில் எடுத்தால் வரும். இது வெளிப்படையான பொருள். இதையே பக்திப்பூர்வமாகப் பார்ப்போமேயானால் திருமணமான...