இடுகைகள்

ஏப்ரல் 26, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

படங்களும்… பாடங்களும்…

படம்
கவிதைகள், நாடகங்கள், சிறுகதைகள், திரைப்படங்கள், புத்தகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், சிற்பங்கள், ஓவியங்கள், இசை என படைக்கப்படுகின்ற எல்லாமே பொழுது போக்குவதற்காகவா? அல்லது பயன்பாட்டிற்காகவா? அதாவது கலை என்பது கலைக்காகவா? மக்களுக்காகவா? என்ற பட்டிமன்றத் தலைப்பு ஒன்று வெகுகாலமாகவே, ரசிகர்கள், படைப்பாளிகள், விமர்சகர்கள் மத்தியில் காரசாரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.                ‘எந்த ஒரு படைப்பும் ஏதாவது ஒரு பயனைத் தரவேண்டும்’ என்கின்றனர் சிலர்.                ‘படைப்பை ரசித்து மகிழ வேண்டுமே, தவிர, ஆராய்ச்சி செய்து குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது’ எனச் சொல்கின்றனர் சிலர்.                உதாரணமாக, ஒரு செடியில், வாசனை பொருந்திய, வண்ணங்கள் நிறைந்த மலர் பூத்திருக்கிறது என்றால் அதனை ரசிக்க வேண்டும். ரசனைதான் முக்கியம் என்று சிலர் சொல்ல… அந்தப் பூ பூப்பதே காயாகிப், பழமாகி, விதை ...