திரிசரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் ‘ கலிகாலக் கம்பர்’ என அழைக்கப்படுகின்ற கவிச்சக்கரவர்த்தி ஆவார். இவரது கற்பனையில் உதித்த தலபுராணங்களும், தனிப்பாடல்களும் கலம்பகம், உலா, பிள்ளைத்தமிழ், தூது எனும் சிற்றிலக்கிய வகைகளும் இவரது கவிஆற்றலுக்கு எடுத்துக்காட்டுகளாய் அமைந்தன இவர்; பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் படைத்துள்ளார் என இவரது மாணவராகிய தமிழ்த்தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் குறிப்பிடுகிறார். இவர் திருவாவடுதுறையின் ஆதீனகர்த்தராக விளங்கிய அம்பலவாண தேசிகர் மற்றும் சுப்பிரமணிய தேசிகர் அவர்களால் ஆதரிக்கப்பெற்று அவ்ஆதீனத்தின் அவைக்களப்புலவராகவும் விளங்கினார். இவர் எழுதிய வாட்போக்கிக் கலம்பகம் மற்றும் சேக்கிழார் பிள்ளைத் தமிழ், திருநாகைக்காரோணப் புராணம் போன்ற நூல்கள் இவரின் தமிழ்ப்பணிக்குப் பெருமை சேர்த்து வருவன. அந்தக்காலத்தில் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் மட்டுமே இருந்த சூழலில் அரிய நூல்களை மாணவர்களுக்குக் கற்பிப்பதற்காகவே இவர் தன் வீட்டிலேயே...
இந்த உலகம் இறைவனால் படைக்கப்பட்டிருந்தாலும் இயற்கையால் ஒன்றிணைந்;திருந்தாலும் இதனை அழகுபடுத்திய பெருமையும், அடுத்த கிரகங்களை நாடுகின்ற முயற்சியும் அறிவியல் அறிஞர்களால் கைகூடியது என்பது மறுக்க முடியாத உண்மை. கலிலியோ, கோபர்நிகஸ், லியோனார்டோ டாவின்சி, டெஸ்லா, தாமஸ் ஆல்வா எடிசன், ரைட் சகோதரர்கள் என ஒவ்வொருவரும் மனிதகுலத்தின் பல்வேறு உயர்வுக்குக் காரணமாய் இருந்தார்கள். இதேபோல கிப்போகிரேட்ஸ் தொடங்கி, தமிழகத்தில் தோன்றிய உடற்கூற்று அறிஞர்கள் முதல் தற்காலத்தில் உறுப்புமாற்று சிகிச்சை மூலம் மனிதவாழ்க்கையை நீட்டித்துக் கொண்டிருக்கும் மருத்துவ மாமேதைகளின் பங்கினையும் நாம் மறக்கமுடியாது. ஜேம்ஸ் வாட், ஜார்ஜ் ஸ்டீபன்சன், ஹென்ரி போர்டு போன்றவர்கள் வாகனக் கண்டுபிடிப்புகள் மூலம் மனிதர்களின் பயணநேரத்தை விரைவாக்கித் தூரங்களைக் குறைவாக்கி உலகை வியக்க வைத்தார்கள். அலெக்சாண்டர் பிளம்மிங்கும், லூயி பாஸ்டரும், எட்வர்ட் ஜென்னரும், மேரி கியூ...
நான் பள்ளியில் படிக்கிற காலங்களிலும் (சோழவந்தான் – முள்ளிப்பள்ளம் அரசுப் பள்ளி) பின்னர் கல்லூரிக் காலங்களிலும் மொழிபெயர்ப்பு நூல்களை விரும்பிப் படிப்பேன். அவ்வாறு நான் படித்த இந்தியமொழி நாவல்களுள் மராத்திய எழுத்தாளரான காண்டேகர் அவர்களுடைய நாவல்களை நான் மட்டுமில்லை, அந்தக்காலத்தில் தமிழக வாசகர்களே மிக விரும்பிப் படித்தார்கள். அப்படி அனைவரையும் படிக்க வைத்த பெருமை காஞ்சிபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசன் அவர்களையே சாரும். ஆம் இவர்தான் கா.ஸ்ரீ.ஸ்ரீ . இவர் உத்திரப்பிரதேசத்தில் உள்ள பிருந்தாவன் என்ற ஊரில் 1913ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி பிறந்தார். தமிழ்நாட்டில் சென்னையில் இவர் வாழ்ந்தபோது, காந்தியடிகள் அகில இந்திய எழுத்தாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்னைக்கு வருகைதந்தாராம்.அப்போது தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படுகின்ற உ. வே. சாமிநாதய்யர் அவர்கள் காந்திஜி அவர்களுக்குத் தமிழில் வரவேற்புரை எழுதி வாசிக்க, அதை ஹிந்தியில் மொழிபெயர்த்து வாசித்த பெருமை கா.ஸ்ரீ.ஸ்ரீ.அவர்களுக்குத்தான் கிடைத்தது. அதன்மூலம் உ. வே....
கருத்துகள்
கருத்துரையிடுக