இடுகைகள்

ஏப்ரல் 4, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெண்ணரசியின் பேரருள்… (சித்திரைத் திருவிழா)

படம்
               கல்லூரியில் முதுகலை வகுப்பில் ஒரு மாணவி எழுந்து, ‘ஐயா சித்திரைத் திருவிழாவை சித்திரை மாதம் ஏன் கொண்டாடுகிறோம்’ என்று கேட்டவுடன் பலர் சிரித்தார்கள்.                ‘சித்திரைத் திருவிழாவை சித்திரை மாதம் கொண்டாடம பிறகு என்ன செப்டம்பர் மாசத்துலய கொண்டாடுவாங்க’ என்று ஒரு பையன் சொல்ல, எல்லோரும் சத்தம்போட்டுச் சிரித்தார்கள்.      வகுப்பு நடத்திக்கொண்டிருந்த நான், கேள்வி கேட்ட அந்தப் பெண்ணைப் பாராட்டிவிட்டு, அந்தச் செப்டம்பர் மாத பையனைப் பார்த்து, ‘நீ சொல்லேன் சித்திரைத் திருவிழாவை சித்திரை மாதம் ஏன் கொண்டாடுகிறார்கள்?’ என்று நான் கேட்க, அந்தப் பையன் ‘இதான் நம்ம சிலபஸ்ல இல்லேல சார்’ என்றான்.         ‘இருந்தாலும் சாய்ஸ்ல விட்ருவோம்;’ என்றான் இன்னொருவன். அப்போது நான் சற்றே கடுமையாக, ‘மதுரையில் பிறந்து மதுரையில் வளர்கிற நீங்களே இப்படிப் பேசலாமா?’ என்று சொல்லிவிட்டு, இந்தச் சித்திரைத் திருவிழா கொண்டாடத் தொடங்கி எவ்வளவு ...

அனுபவமே நல்ல கல்வி…

படம்
                                   நாம் சிறுகுழந்தைகளாக இருக்கும்போது , படம் பார்த்துக் கதை சொல்லுதல் நமக்குப் பிடித்தமான ஒன்று. அதிலும் வண்ணப்படங்களாக இருந்துவிட்டால் , குழந்தைகள் முகத்தில் மகிழ்ச்சி பொங்கும். இந்தக்காலக் குழந்தைகள் இத்தகைய படங்களை அனிமே ஷ ன் என்று கார்ட்டூன் மூலமாகக் கண்டு மகிழ்கிறார்கள்.                   ஒரு படம் ஆயிரம் செய்திகளை நமக்கு விளக்கும். சமீபத்தில் நான் , இலக்கிய விழாவிற்காக ஒரு பள்ளிக்குச் சென்றிருந்தேன். ஆயிரம் மரங்களுக்கு நடுவே அந்தப் பள்ளி அழகுற அமைந்திருந்தது. பிற்பகல் நேரத்தில் மரங்களுக்கு நடுவே மாணவ , மாணவிகள் அமர்ந்திருக்க   நான் பேசத் தொடங்கினேன். மரங்களின் பசுமை , பறவைகளின் ஓசை , வண்டுகளின் ரீங்காரம் இவற்றுக்கு நடுவே மண்தரையில் சம்மணமிட்டு , மாணவ மாணவிகள் அமர்ந்திருந்தார்கள். என் பேச்சுக்கு இடையில் நான் இவற்றைக் குறிப்பிட்டுக் கொண்...