நாங்கள் போட்ட நாடகங்கள்…
‘உன் நடிப்பெல்லாம் எங்கிட்ட வேணாம்’ ‘அவன் பெரிய நடிகன்யா’ ‘இந்த நடிப்புத்தானே வேணாங்கிறது’ ‘எங்கிட்ட அப்பிடி நடிச்சு ஏமாத்திட்டாண்டா’ என்று பலரும் பலமுறை பலரைப் பற்றிச் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தச் சொற்கள் உண்மையான நடிகரைப் பற்றியோ, அவரது நடிப்பைப் பற்றியோ சொல்லப்படுவன அல்ல. வாழ்க்கையில் நடிக்கும் மனிதர்களைப் பற்றியே… நான் எங்க;ரில் எங்கள் வயதில் நாடகம் போட முயற்சித்ததையும், அதில் பட்ட சிரமங்களையும் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். எங்கள் ஊரின் மறுகரையில் இருந்த அக்கிரகாரத்துக் கிருஷ்ணன் கோவிலில் திருவிழா...