முத்தமிழ் வித்தகர்… கொத்தமங்கலம் சுப்பு
தமிழ்த்திரையுலகில் நடிகராகக், கவிஞராக, எழுத்தாளராக, ‘ஒளவையார்’ என்ற படத்தை இயக்கிய பெருமையுடையவராகத் திகழ்ந்தவர்தான் பல்துறைக் கலைஞரான கொத்தமங்கலம் சுப்பு அவர்கள். தில்லானா மோகனாம்பாள், ராவ் பகதுர் சிங்காரம், பந்தநல்லூர் பாமா, போன்ற புதினங்களை ‘ஆனந்தவிகடன்’ வார இதழில் எழுதியவர். மிகச்சிறந்த கவிஞர், மிகச்சிறந்த நகைச்சுவையாளர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இதற்கான சான்றினை ஒரு பதச்சோறாகக் காண்போம்… கிராமத்தில் நிலத்தை உழுதுகொண்டிருக்கின்ற விவசாயிக்கு அவன் மனைவி கஞ்சி கொண்டு செல்கிறாள். உழுது முடித்து வந்தவன் கலையத்திலிருக்கும் கஞ்சியை ஒரு வாய் குடிக்கிறான். உடனே அவன் மனைவி, ‘மச்சான் கொஞ்சம் இரு’ என்று சொல்லிவிட்டு, தன் முந்தானையில் முடிந்து வைத்திருந்த உப்பினை அந்தக் கஞ்சியில் போட்டுக் கரைத்து அவனுக்குக் கொடுக்கிறாள். அந்தக் கஞ்சியை ரசித்து, ருசித்துக் குடித்த அந்த விவசாயி, ‘ஆஹா! இந்தக் கஞ்சியில் போட்டு ருசியோடு குடிப்பதற்காகத்தான் கடலிலே உப்பை இந்தக் கடவுள் உருவாக்கித் தந்திருக்கிறான்’ என்று சொல்லிவிட்டு அதைப் பாட்டாகப் பா...