இடுகைகள்

ஜனவரி 3, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புலவர் பாட்டுக்கு உரைஎழுதிய உழவர்

படம்
                         தமிழ் இலக்கிய வரலாற்றில் அரிய பணிகள் செய்திருந்தும்கூட, அவர்கள் அறியப்படாத அறிஞர்களாகவே வாழ்ந்து மறைந்திருப்பது வருந்தத்தக்க செய்தியாகும்.   சோழவந்தானூர்  அரசஞ்சண்முகனார்   போன்ற அறிஞர்களின் தமிழ்ப்பணியை இந்த உலகம் அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகத்தான், என் தந்தையார்   புலவர்   கு. குருநாதன்   அவர்கள்   ‘ சோழவந்தானூர்  அரசஞ்சண்முகனாரின்  தமிழ்ப்பணி’   என்ற தலைப்பில் என்னை மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப்பட்ட ஆய்வினை (பி.ஹெச்.டி) மேற்கொள்ளப் பணித்தார். நானும் அவ்வாறே பல்லாண்டுக்காலம் (1983 – 1989, ஆறாண்டுகள்) அவரது மறக்கப்பட்ட நூல்களைத் தேடி ஆய்வுசெய்து முனைவர்ப்பட்டமும் பெற்று தற்போது   காவ்யா  பதிப்பகத்தில்   நூலாகவும் வெளியிட்டுள்ளேன்.                இதேபோன்று எனது மேற்பார்வையில் முனைவர்ப்பட்ட ஆய்வினை மேற்கொண்ட எனது மாணவ, மாணவியருக்கும் கூடியமட்டும...

வரலாற்றுத் தொலைநோக்கி… தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்

படம்
நான் அயல்நாடுகளுக்குச் செல்லுகிறபோதெல்லாம் அங்குள்ள பல்கலைக்கழகங்கள், அருங்காட்சியகங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் இவற்றையெல்லாம் பார்த்து அவற்றுக்கான காலப்பின்னணியைக் கேட்டுத் தெரிந்து கொள்வேன். அமெரிக்காவுக்கு முதன்முதலில் பயணப்பட்டபோது (2003ஆம் ஆண்டு) அங்கு அவர்கள் சுற்றிக்காட்டிய பழமையான கட்டிடங்கள் எல்லாம் ஐநூறு ஆண்டுகளுக்கு உட்பட்டவையாகவே இருந்தன. அப்போது நான், ‘எங்கள்  தமிழ்நாட்டுக்கு வாருங்கள், ஈராயிரம் ஆண்டுப் பழமையுடைய கோயில்களும், கட்டிடங்களும் எவ்வளவோ உண்டு’ என்று பெருமையாகச் சொல்லுவேன். பள்ளியில் நான் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே சரித்திரக் கதைகள் மீது எனக்கு அளவற்ற விருப்பம் உண்டு. அதிலும் குறிப்பாகப்  பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன்  போன்ற வரலாற்று நாவல்களை எழுதிய  எழுத்தாளர் கல்கி  அவர்களுடைய எழுத்தைப் படிப்பதென்றால், எனக்கு நேரங்காலம் போவது தெரியாது. கல்கியைத் தொடர்ந்து  சாண்டில்யன், ஜெகசிற்பியன், நா.பார்;த்தசாரதி, அகிலன்  ஆகியோரின் வரலாற்றுப் படைப்புகளும் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில...

புத்தாண்டு வாழ்த்துகள்… மார்கழியின் பெருமை

படம்
  ‘மாதங்களில் நான் மார்கழியாய் இருக்கிறேன்’   என்பது பகவத்கீதையில் கண்ணபெருமான் சொன்ன வார்த்தை.                 ‘ காலங்களில்  அவள்  வசந்தம்                 கலைகளிலே  அவள்  ஓவியம்’ என்று சொன்ன  கவியரசு  கண்ணதாசனும்,                 ‘ மாதங்களில்  அவள்  மார்கழி                 மலர்களிலே  அவள்  மல்லிகை’ என்று மார்கழி மாதத்தைப் பாராட்டுகின்றார். அப்படி என்ன அந்த மார்கழியின் சிறப்பு என்று யோசித்துப் பார்த்தேன். இந்த மார்கழி மாதத்தில்தான் சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சைவப் பெருமக்களுக்குரிய  ‘ திருஆதிரை’ த் திருநாள் வருகிறது. திருமாலை மட்டும் போற்றி வணங்கும் வைணவ அடியார்களுக்குரிய  ‘ வைகுண்ட  ஏகாதசி ’த் திருநாளும் இம...