இடுகைகள்

Soorasamharam லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கந்தசஷ்டியும்… சூர சம்ஹாரமும்…

படம்
தமிழ்க்கடவுளாகிய முருகன் சங்கஇலக்கியங்களில் பெரிதும் போற்றப்படுகின்ற பழைமையான கடவுள். சங்கஇலக்கியமாகிய   பத்துப்பாட்டில்  முதலாவதாக உள்ள   நக்கீரர்   பாடிய   திருமுருகாற்றுப்படை  முருகப்பெருமானுடைய ஆறுபடை வீடுகளினுடைய பெருமையைக் கூறுகின்ற நெடும்பாட்டு. இதேபோல,   எட்டுத்தொகை   நூல்களுள்   பரிபாடலிலும்  முருகப்பெருமான் பெருமை எடுத்துரைக்கப்படுகின்றது. இம்முருகப்பெருமான் வேலினை உடைய வீரனாக, பாலமுருகன், வீரமுருகன், ஞானமுருகன் என்று அனைவராலும் போற்றி வணங்கப்படுகின்றார். ஐப்பசி மாதத்தில் அமாவாசை அடுத்த வளர்பிறை நாளில் முருகனைவேண்டிப் பக்தர்கள் விரதம் இருக்கின்றனர். இது  ‘ ச ஷ் டி’  என்று அழைக்கப்படுகின்றது. குறிப்பாகக் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இந்த விரதத்தைக் கடைபிடிப்பார்கள். ‘சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்’- இது பழமொழி. இந்தப் பழமொழியினுடைய பொருள் சமைக்கின்ற மண்சட்டிகளில் உணவோ, காய்கறிகளோ இருந்தால்தான் அது அகப்பையாகிய கரண்டியில் எடுத்தால் வரும். இது வெளிப்படையான பொருள். இதையே பக்திப்பூர்வமாகப் பார்ப்போமேயானால் திருமணமான...