எலி வேட்டை
யானைக்கொரு காலம் வந்தால் பூனைக் கொரு காலம் வரும்” இது பழமொழி. புதுமொழி சொல்ல வேண்டுமென்றால், ‘ புலிக்குப் பயந்த காலம் போய் எலிக்குப் பயந்த காலமாகி விட்டது’ எனக் கூறலாம். அப்படி என்ன எலிகளுக்குப் பலம் வந்து விட்டது என நினைக்கிறீர்களா? எலியால் விளைந்த துயரையும், அதனால் விளைந்த பலனையும் உங்களுக்குக் கூறட்டுமா? அப்போது நாங்கள் கிராமத்தில் இருந்தோம். மிகப்பெரிய பழைய வீடு. பெரும்பாலும் பகலில்கூட, கீழே படுத்திருப்பவரை மிதித்துக் கொண்டு போகும்பட...