இடுகைகள்

மார்ச் 13, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஹரித்துவாரில் ஞானசம்பந்தன்….

படம்
          நூற்றாண்டுகள் கண்ட பழமையும் பெருமையும் மிக்க தமிழ்ச் சங்கம்.  நான்காம்  தமிழ்ச்  சங்கம்  எனும் பெயரால் அழைக்கப்படும் மதுரைத் தமிழ்ச்சங்கம் (தற்போதுசெந்தமிழ்க்கல்லூரி).  பாலவநத்தம்  ஜமீன்தார்  பாண்டித்துரைத்    தேவர்  அ வர்களால் நிறுவப்பெற்ற புகழுடையது. காலஞ்சென்ற  என்  தந்தையார்  புலவர்  கு. குருநாதன் , 1933ஆம் ஆண்டு முதல் 1942ஆம் ஆண்டு வரை  பால  பண்டிதம்,  பண்டிதம்,  புலவர்  பட்டங்களை இத்தமிழ்ச் சங்கத்தில் பயின்றுதான் பெற்றுத் தேர்ந்தார்.                 திரு. நாராயண  அய்யங்கார்,  மு.  இராகவ  அய்யங்கார்,  இரா.  இராகவ  அய்யங்கார்  போன்ற தமிழ்ச் சான்றோர்களிடத்தில் பாடம் பயின்ற பெருமை தனக்கு உண்டு என அடிக்கடி கூறுவார் என் தந்தையார். தவிரவும், அக்காலத்தில் தேர்வில் வெற்றிபெறுவது மிகக் கடினம் என்பதைச் சொல்லி ஓர் உதாரணமும் எனக்குச் சொன்னார்.  ...