இடுகைகள்

மயிலை சீனி. வேங்கடசாமி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மயிலை தந்த மாமேதை…

படம்
  தமிழக இலக்கிய உலகில் எழுத்தாளர்களும், கவிஞர்களும் அறியப்பட்ட அளவு ஆராய்ச்சியாளர்கள்அறியப்படவில்லை. புனைகதை எழுத்தாளர்களையும், திரைப்படக் கவிஞர்களையும்தான் கற்றவர் முதல் மற்றவர்வரை அறிந்திருந்தனர். தமிழகத்தின் ஆய்வுலகில் தனக்கென ஒரு தடம் பதித்தவர்   மயிலை  சீனி.  வேங்கடசாமி. இவர் சென்னை மயிலாப்பூர் பகுதியில் 1900ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தையார் ஒரு சித்த மருத்துவர். இவருடைய இரண்டாவது அண்ணன்  சீனி.  கோவிந்தராஜன்  ஒரு தமிழறிஞர்.  திருக்குறள்  காமத்துப்பால்  நாட்கள்,  திருமயிலை  நான்மணி  மாலை  ஆகிய படைப்புகளை எழுதியவர். வேங்கடசாமி அவர்கள் கோவிந்தராஜனிடம் தமிழ் பயின்றார். பின்  மகாவித்வான்  சண்முகம்  பிள்ளை,  பண்டித  சற்குணர்  ஆகியோரிடம் தமிழ் படித்தார்.  பின்னர்  நீதிக்கட்சி  நடத்திய  திராவிடன்  இதழின்  ஆசிரியர் குழுவில் பணிக்குச் சேர்ந்தார். சிலகாலம் கழித்து, மயிலாப்பூரில் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்த இவர், வி...